செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

பிரசவ விடுமுறை 24 வாரமாக அதிகரிப்பு! மத்திய மந்திரி அறிவிப்பு!!

பெண் தொழிலாளிகளுக்கு தற்போது 12 வார பிரசவ விடுமுறை வழங்கப்படுகிறது. இதை 24 வாரமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய மந்திரி தெரிவித்தார். 1961- ம் ஆண்டின் பிரசவ கால நன்மைகள் சட்டத்தின் படி வேலை பார்க்கும் பெண் கர்ப்பமடைந்தால் அவருக்கு 12 வார பிரசவ விடுமுரை அனுமதிக்கப்படுகிறது. இதை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு பரீசீலிப்பதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா பாரளுமன்றத்தில் அறிவித்தார். அவர், மக்களவையில் இதை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரசவ விடுமுறையாக தற்போது அனுமதிக்கப்படும் 12 வாரத்தில் 6 வாரங்களை பிரசவத்திற்கு முன்பு பயன்படுத்த்லாம் என்பது குறிப்பிடத்தக்கது nakkheeran,in

கருத்துகள் இல்லை: