வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மத்திய அரசின் நேரடி மான்யதிட்டம் நிச்சயம் நல்ல திட்டம்தான்

நேரடி மானிய திட்டம் மேலும் 35 பொருட்களுக்கு விரிவு படுத்த போகுகிறது மத்திய அரசு என்று அறிவிப்பு வந்தது .அப்படி வந்து அமுல் படுத்தினால் அதுவும் உலகிலே அதிக பொருட்கள் மானியத்தில் அதிக மக்களக்கு அதுவும் நேரடி மானியம் என்று கின்னஸ் சாதனையில் இடம் பெற அதிக வாய்ப்பு .......இந்த நேரடி மானியத்தால் முறை கேடுகள் ஒழிந்து உள்ளது வரவேற்க்க பட வேண்டிய ஒன்று ....அதுவும் அரசுக்கு 90 ஆயிரம் கோடி மிச்சம் என்பது சாதாரண விசயம் இல்லை போலிகள் இல்லாமல் செய்வதால் அரசுக்கு லாபம் 
புதுடில்லி:சமையல் எரிவாயு மானியத்தை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும், மத்திய அரசின், 'பாஹல்' திட்டம், 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:மத்திய அரசின், 'பாஹல்' திட்டம், உலகிலேயே, மிக அதிகமான மானிய தொகையை, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குகிறது என்று, கின்னஸ் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த, 2014ம் ஆண்டு, நவம்பர், 15ம் தேதி, 54 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டு, இந்தாண்டு, ஜனவரி 1முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இதுவரை, 13.9 கோடி பேர் இணைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு, ஆண்டு ஒன்றுக்கு, மானிய விலையில், 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. நேரடி மானிய திட்டம் மூலம், ஆண்டுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய், அரசுக்கு மிச்சமாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வினவு.com 

கருத்துகள் இல்லை: