திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தகவல் ஆணையர் நியமனங்களில் எத்தனை முறைகேடுகள்? கலைஞர் அறிக்கை

10-8-2015 தேதிய  தமிழக நாளேடுகள் அனைத்திலும், மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக, முன்னாள் டி.ஜி.பி.யும், தமிழக அரசின் ஆலோசகராகத் தற்போது பணியாற்றி வருபவருமான கே. ராமானுஜமும், தகவல் ஆணையர்களாக மேலும் இருவரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட செய்தி வந்துள்ளது. இந்தப் பதவியினை ஏற்றவர்களின் பின்னணி என்ன என்பது பற்றித் தமிழ் நாளேடுகள் முக்கியமான செய்திகளை மறைத்த போதிலும், ஆங்கில நாளேடுகள் விரிவாக எழுதியுள்ளன. 

குறிப்பாக “தி. இந்து”“ ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில், “After serving as DGP, Mr. Ramanujam served as an advisor  to the Government,  Mr. Dakshinamurthy had served  as the Additional Chief Metropolitan Magistrate (Economic  Offences-I) at the time of retirement, say  official sources.   He heard Income Tax cases against Chief  Minister Jayalalithaa and her close associate Sasikala for non-filing of returns.   After accepting the compounding fee and other charges totally  nearly Rs. 2 crore by the accused, the IT department filed a petition withdrawing the criminal proceedings in January 2015.  It was Mr. Dakshinamurthy who dismissed the cases as withdrawn   Mr. Murugan, a lawyer by profession, is a functionary of the AIADMK’s SC/ST wing.  He contested unsucessfully in the 2004 Lok Sabha elections, party sources said” என்று தெரிவித்துள்ளது.

தகவல் துறையின் முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே. ராமானுஜம், பணி ஓய்வு பெறுவதற்கு ஒரே ஒரு நாள் முன்னதாக டி.ஜி.பி..யாக பணி நியமனம் செய்யப்பட்டு, இரண்டாண்டு பணியாற்றி, பணியிலிருந்து ஓய்வு பெற்றதற்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியிலே “ஆலோசகராகப்”“  பணியாற்றியவர். இவரது பணி நீடிப்பினை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அது சம்பந்தமாக மத்திய அரசிலே கோப்புகள் நிலுவையிலே உள்ளன என்றும் கூறப்பட்டு வந்தது. ஊதியம் இல்லாமலே கூட அவர் ஆலோசகராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டது. ராமானுஜம் கடந்த காலத்தில் உளவுத் துறையில் பணியாற்றி,  ரகசியங்களை எல்லாம் காப்பாற்றும் பொறுப்பிலே இருந்தவர். அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பதவியோ அரசின் உண்மையான தகவல்களைக் கேட்பவர்களுக்கு எவ்வித ஒளிவு மறைவுமின்றி அவற்றைச் சேகரித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பாகும். இவரது நியமனம் குறித்து, புகழ்பெற்ற தகவல் பெறும் உரிமை ஆர்வலரும், 2008இல் மத்திய தகவல் ஆணையத்தில் இடம் பெற்றிருந்தவருமான ஷைலேஷ் காந்தி என்பவர், “டைம்ஸ் ஆப் இந்தியா”“  நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், “This is ridiculous. An Officer who works in the intelligence wing is secretive because the job requires that. How can such a person head the information commission where tranparency is of paramount importance?”என்றே தெரிவித்திருக்கிறார். இதே கேள்வியைத் தான் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் கூட அவர் பொறுப்பேற்பதற்கு முன்பே கூட கேட்டதோடு, தகவல் ஆணையம் மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை பலவீனப்படுத்தும் வகையிலும், தகவல் பெற விரும்பும் மக்களை அவமதிக்கும் வகையிலும் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.   

தகவல் துறை ஆணையராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி தெட்சிணாமூர்த்தி அவர்களைப் பற்றி நான் கடந்த ஆண்டே,  20-4-2014, 2-7-2014,  11-7-2014  ஆகிய தேதிகளில்  விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன். ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்ய வில்லை. 1993-94ஆம் ஆண்டுக்கு  ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப் பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமான வரித் துறையிடம் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.  இதற்காக அவர்கள் மீது 1996இல் வருமான வரித் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.   இந்த வழக்கு எழும்பூர் நீதி மன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப் பிரிவு நீதி மன்றத்தில் கடந்த  15 ஆண்டுகளாக துhங்கிக் கொண்டிருந்தது.  30-6-2014 அன்று ஜெயலலிதா, சசிகலா மற்றும்  சசி எண்டர்பிரைசஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு வருமான வரித் துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  எனவே இந்த விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் கோரினார்கள்.  இந்த வழக்கிலே தான் நீதிபதி தெட்சணாமூர்த்தி அவர்கள் -  19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி  ஜெயலலிதா தரப்பினர்  தாக்கல் செய்த மனுவினை ஏற்று,   வழக்குகளில் இருந்து  அவர்களை விடுவித்து உத்தரவிட்டார்.  இந்தச் செய்தி அப்போதே நாளேடுகளில் எல்லாம் விரிவாக வந்தது.  

அவ்வாறு வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்த நீதிபதி தெட்சணாமூர்த்திக்குத் தான் தற்போது  தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட்டு,  அவர் பதவிப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார். தற்போது பூனை வெளிவந்து விட்டது என்பது புரிகிறதா? இல்லையா? வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதன் பின்னணி நிரூபணமாகி விட்டதா இல்லையா? இதற்கு மேலும் தற்போதைய நியமனம் பற்றிச் சான்றுகள் வேண்டுமா என்ன?  நேற்றைய தினம் என்னுடைய “உடன்பிறப்பு”“  மடலில் ஒரு சில நீதி மன்றங்கள், ஊழல் மன்றங்களாக விளங்குகின்றன என்று எழுதியதற்கு இதுவும்  ஒரு விளக்கம் என்பது புரிகிறதா அல்லவா?

தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மற்றொருவர் யார் என்பதையும் “இந்து”“ நாளேடு குறிப்பிட்டுள்ளது. அதாவது அவர் அ.தி.மு.க. வின் ஒரு பிரிவிலே பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுப்  பணியாற்றுபவர் என்றும்,  கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தவர் என்றும் எழுதியுள்ளது.   

தகவல் உரிமைச் சட்டத்தின்படி  முதல்வர்,  எதிர்க்கட்சித் தலைவர்,  கேபினட் அமைச்சர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் கமிட்டியின் பரிந்துரையின் பேரிலேயே மாநிலத் தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். தி.மு. கழக ஆட்சியின்போது,  இந்தப் பதவியில் நியமனம் செய்வதற்காக எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு அரசின் சார்பில் அழைப்புக் கடிதம் எழுதப் பட்டபோது, கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில்,  அந்தப் பதவிக்கு யார் யார் விண்ணப்பித்துள்ளார்கள், அவர்களைப் பற்றிய தகவல்கள் என்ன என்பதை யெல்லாம் தனக்கு விவரமாக அனுப்பும்படி கடிதம் எழுதியிருந்தாரே தவிர,  கூட்டத்திலே கலந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார்.    தற்போது மாநிலத் தலைமை தகவல் ஆணையரை நியமிப்பதற்கான கூட்டத்திற்கு கூட, எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் தே.மு.தி.க. தலைவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா என்று செய்தியாளர்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்குத்  தொடர்பு கொண்டு கேட்ட போது,  அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாகவும்,  அந்தக் கடிதத்திலே கூட தகவல் ஆணையத்தில் உள்ள காலியிடங்களைக் குறிப்பிட்டு,  கட்சியின் கருத்தினை மட்டுமே கேட்டிருந்ததாகவும்,  அந்தக் கடிதமும் கூட்டம் நடைபெற்ற நாளன்று தான் கிடைத்ததாகவும், அதனால் அவர்களால் அதற்குப் பதிலளிக்க இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவியும், தகவல் ஆணையாளர்  பதவிகளும்  பல மாதங்களாகக்  காலியாக உள்ளன.  இவ்வளவு கால தாமதமாக நியமனம் செய்திருப்பதிலும் எத்தனை முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் தான் இந்த அறிக்கை! இவ்வாறு கூறியுள்ளார். nakkheeran,in 

கருத்துகள் இல்லை: