செவ்வாய், 21 ஜூலை, 2015

பிரபாகரனிடம் உதவியாளராக இருந்த விடுதலைப்புலி 75 சயனைடு குப்பிகளுடன் கைது

இந்தியாவில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால், புலிகள் இயக்கத்தினரை சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீ சாரால் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறார் கள். அனைத்து மாவட்டங்களி லும் உள்ள இலங்கை அகதிகள் முகாமும் போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகன சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாத புரத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் வாகன சோதனையின் போது பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

மதுரையில் இருந்து ராம நாதபுரம் செல்லும் சாலையில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.
சசிகுமார் என்பவர் காரை ஓட்டி வந்தார். காருக்குள் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் கிருஷ்ணகுமார் (39) இன்னொருவர் பெயர் ராஜேந்திரன் (44) என்பது தெரிய வந்தது. 2 பேரின் உடமைகளையும் போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது கிருஷ்ணகுமார் வைத்திருந்த பையில், 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு, 4 ஜி.பி.எஸ். கருவிகள், 8 செல் போன்கள் ஆகியவை இருந்தன. 42, ஆயிரத்து 200 ரூபாய் இந்தியன் கரன்சியும் 19 ஆயிரத்து 300 ரூபாய் இலங்கை கரன்சியும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், கிருஷணகுமாரை தனிமைப் படுத்தி அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப்புலி என்பது தெரிய வந்தது. மேலும் அவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உயர் போலீஸ் அதி காரிகள், கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இவர்கள் அனைவரும் விடுதலைப்புலி கிருஷ்ண குமாரிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார் கள். ரகசிய இடத்தில் வைத்து கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள அலவெட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் கடந்த 1990-ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர், அவருடனேயே நீண்ட நாட்கள் ஒன்றாகவே இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்துள் ளார்.
இறுதிக்கட்ட போர் நடந்த போது விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பலர் அணி அணியாகவும், தன்னந் தனியாகவும் இலங்கையை விட்டு வெளியேறினர். அப்போது தான் கிருஷ்ண குமாரும் தமிழகத்துக்கு வந்துள்ளார்.

திருச்சியில் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட் பட்ட பகுதியில், அவர் தங்கி இருந்து வந்துள்ளார். அகதிகள் முகாமில் தங்காமல் வெளியிலேயே வாடகை வீட்டில் கிருஷ்ணகுமார் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று இரவு திருச்சியில் இருந்து புறப்பட்ட அவர் மதுரை வந்து அங்கிருந்து கார் மூலமாக ராமநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது தான் போலீசில் சிக்கிக் கொண்டார். இதை யடுத்து கிருஷ்ணகுமாரை கைது செய்துள்ள போலீசார் அவரை சிறப்பு அகதிகள் முகாமில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகுமார் கடல் மார்க்கமாக கள்ளத்தோணி யில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டு செயல் பட்டுள்ளார். 75 சயனைடு குப்பிகள் மற்றும் சயனைடு பொட்டலங்களுடன் அவர் இலங்கைக்கு செல்ல முயற்சி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு சப்ளை செய்வதற்காக இவர் இதனை எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் இலங்கையில் மீண்டும் புலிகள் இயக்கத்தி னர் வலுவாக தடம் பதிக்க தயாராகி வருவதும் உறுதி யாகி உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். கிருஷ்ண குமாருக்கு உதவி கள் செய்த குற்றத்துக்காக டிரைவர் சசிகுமார், ராஜேந் திரன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்<dailythanthi.com

கருத்துகள் இல்லை: