சனி, 3 ஜனவரி, 2015

சானிடரி நாப்கினுக்காக ஒரு முகநூல் போராட்டம்! நாப்கினை அப்புறப்படுத்த வசதி....

நீங்கள் யூஸ் செய்த நாப்கினை தூக்கியெறிய வேண்டாம், நாங்கள் குறிப் பிடும் இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்ற ப்ரொபைல் பிக்சருடன் தடதடக்கிறது ஒரு முகநூல் பக்கம். 'கிஸ் ஆப் லவ்' என்னும் போராட்டத்தின் மூலமாக பல்வேறு விமர்சனங்க ளை சந்தித்த அதே கேரள மண்ணில்தான் இப்படி ஒரு நூதன போராட்டம் தொடங்கியிருக்கிறது. கொச்சியில் உள்ள ’அஸ்மா ரப்பர் புராடக்ட்ஸ்’ என்ற நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு, “ பயன்படுத்திய நாப்கினை கழிவறையில் போடக் கூடாது”  என்ற விதிமுறையை விதித்திருக்கிறது. ஆனால் கடந்த மாதம், ஒரு பெண் ஊழியர் தான் பயன்படுத்திய நாப்கினை கவனக் குறைவாக கழிவறையில் போட்டுவிட பதட்டமானது அந்த நிறுவனம். யார் இந்த வேலையை செய்தது என்பதை அறிவதற்காக அங்கு பணிபுரியும் அனைத்து பெண்களின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த விவகாரம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்றிவிட, பெண் போராளிகள் கொதித்துப் போயினர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சோதனையிட்ட இரண்டு பெண் பணியாளர்கள் மீது வழககு தொடரப்பட் டுள்ளது.


பிரச்னையை அத்துடன் முடித்துக்கொள்ள விரும்பாத சில பெண்ணியவாதிகள்  அடுத்த கட்டத்துக்கு தங்கள் போராட்டத்தை எடுத்துச்செல்ல முடிவெடுத்தனர். எந்த ஒரு விஷயத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் விரைவாக மக்களிடையே கொண்டு செல்ல முடியும் என்பதால் முகநூலை தங்கள் போராட்டக் களமாக தீர்மானித்துக்கொண்டனர்.
திருவனந்தபுரத்தைச் சார்ந்த மாயா லீலா, இப்படி ஒரு முகநூல் கணக்கைத் துவக்கினார். ஸ்பெயினில் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருக்கும் இவர், அங்கிருந்தபடியே முகநூலில் "ரெட் அலர்ட்: யூ ஹேவ் காட் எ நாப்கின்" என்ற பக்கத்தையும் ஆரம்பித்து இன்னும் சூடாக்கிவிட்டார் இந்தப் பிரச்னையை. 
“ தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கினை அப்புறப்படுத்த முறையான வசதி செய்து கொடுத்திருந்தால் இது போன்ற பிரச்சனை வந்திருக்காது அதை விடுத்து, பெண்களின் ஆடையை அவிழ்த்து சோதனை இடுவது என்பது தனிமனித அத்துமீறல் மற்றும் மிகவும்  அநாகரிகமான ஒன்று. இதனை எதிர்த்து தான் இந்த போராட்டம்’’என்று தங்கள் போராட்டத்துக்கு இன்ட்ரோ கொடுக்கிறது இந்த முகநூல் பக்கம்.

'கிஸ் ஆப் லவ்' போல இதுவும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது இப்போது. வேலைக்கு செல்லும் பெண்களிடமிருந்து இந்தபக்கத்திற்கு ஏக வரவேற்பு இப்போது. பலரும் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத நாப்கினை அனுப்ப துவங்கிவிட்டார்கள் இந்த விலாசத்திற்கு. 
“ வீட்டுப் பணிகளோடு தமது திறமையினால் வெளியிடங்களுக்கு வேலைக்கு வரும் பெண்கள் அன்றாடம் பல அசௌகரியங்களை சந்திக்கிறார்கள. குறைந்தது அவர்களுக்கு இந்த நாப்கினை அப்புறப்படுத்தும் வசதியையாவது செய்து கொடுக்க வேண்டும் நிறுவனங்கள். ஆனால் பல நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்கள் கழிவறையைக்கூட  இரண்டு முறைக்கு மேலே பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

இது போல நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடக்கிறது” என கொதிக்கும் இந்த முகநூல் போராளிகள்,  “வெறும் கட்டளைகள் இடுவதற்கு பதிலாக அதற்கு பெண்களின் சூழலை கருத்தில்கொண்டு மாற்று வழிமுறைகள் ஏதாவது விகடன்.com

கருத்துகள் இல்லை: