ஞாயிறு, 28 டிசம்பர், 2014

சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது!

பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட் திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த ஒரு பெண், இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி, பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலிக்கும்போது பரஸ்பர சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது இந்தியாவின் பெரிய நகரங்களில் தற்போது இயல்பாகிவிட்டதாகவும், இந்த விதமான காதல் தோல்வியில் முடிவடைந்த பின்னர், காதலி தன்னை காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: