புதன், 15 அக்டோபர், 2014

ட்ராபிக் ராமசாமி ஜெயலலிதா வழக்குக்கு உச்ச நீதிமன்றில் குறிப்பாணை! ஜெயா வக்கீலின் மகனே நீதிபதியாக உச்ச நீதிமன்றில் ? conflict of interest?

ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி
நாரிமன் Fali nariman ஆஜராக அனுமதிக்கக் கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலத்தில் குறிப்பாணை அளித்துள்ளார்.>அந்த குறிப்பாணையில்,ஜெயலலிதா அளித்த ஜாமின் மனுவை விரைவில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமன் கேட்டுக்கொண்டார்.வரும் 17ஆம் தேதி மனு விசாரணைக்கு வரும்போது ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலி நாரிமனே ஆஜராக வாய்ப்பு இருக்கிறது. பாலி நாரிமனின் மகனான ரோகிந்த் நாரிமன் Rohinton Nariman உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதால், பாரி நாரிமனை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக வாதாட அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பாணையில் டிராபிக் ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: