வியாழன், 16 அக்டோபர், 2014

ஒப்பாரியில் எனக்கே முதலிடம் ! அதிமுகவில் இன்றைய அரசியல் தகுதி ! எனக்குதாய்ன் சீட்டு ! அப்புறம் அள்ளிக்கோ அள்ளிக்கோ !

அம்மா போஸ்டர்டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!” என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், “மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்!
சொத்துக்குவிப்பு வழக்கில் – தண்டனைக் கைதியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட அடுத்த கணத்தில் ஒரு அ.தி.மு.க.காரர் “என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!” என்றார் சஸ்பென்சாக.
“என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!”
அது கட்சி வட்டத்தைத் தாண்டி தினமணி வைத்தி, தினத்தந்தி பாண்டே, தமிழ் இந்து சமஸ், சிற்பி பாலசுப்ரமணியன் என கதிகலக்கும் என கனவிலும் நினைக்கவில்லை! தெய்வமாயிற்றே! சந்து முனீஸ்வரன் சமஸ் முதல் ஜகஜ்ஜால கில்லாடி வைத்தி, பாதாள பைரவர் சிற்பி வரை அகிலாண்டேஸ்வரி, அகிலமே வியக்கும் ஊழல்புரீஸ்வரிக்குள் அடக்கம் என்பதை அம்மாவின் கைது காட்டிவிட்டது.
“தெய்வத்துக்கே தண்டனையா?” என்று போஸ்டர் அடித்து பொங்கிய ரத்தத்தின் ரத்தங்களும், “இடும்பைக்கு இடும்பை படுப்பர்!” என்ற வள்ளுவர் குறளை மாமிக்கு ஒட்டியாணமாக்கிய வைத்தியும், “அன்று நகைத்தாளடா – என் மாமனே அவளை என் ஆளாக்கினாய்” என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை அம்மாவுக்கு பதவுரையாக்கிய சிற்பியும் ஒரே சாம்பிராணியின் இரு மணங்கள்.

“டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!” என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், “மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்! என்னே சக்தி! அம்மாவை யார் நினைத்தாலும் கட்டைதான்!

திரைத்துறை ஆதரவு
“மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்
தூணில் இருந்தாலும், துரும்பில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும் தெய்வம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பதால் தன்னை எந்த அளவுக்கு வருத்திக் காட்டுகிறோமோ, அந்த அளவு தன் வருங்காலத்துக்கு நல்லது! என்பதை ஊழலின் பக்தர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்! பேருந்து எரிப்பு, கடைகள் உடைப்பு, தீக்குளிப்பு சீன்கள், தீச்சட்டி, தீமிதி, அலகு குத்தல், மண்சோறு என எவ்வளவு சுதி ஏற்றினாலும் தெய்வத்துக்காக ஒரு டெங்கு கொசு கூட சாகாத போது வேறு என்னதான் செய்வது? கூலிக்கு ஒப்பாரியும் கட்டுப்படி ஆகாததால், தமிழகத்தையே மொட்டை அடித்த தாய்க்கு, தன்னால் ஆன காணிக்கையாக தலைக்கு ஒரு மொட்டை போட்டு பெயிலுக்கு மயிர்நீத்த கவரிமான்களாக கட்சிக்காரர்கள் உலா வருகிறார்கள்!
அம்மா லேப்டாப், அம்மா சைக்கிள், அம்மா உணவகம் என கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தலையில் ‘அம்மா சிந்தனை’யை இறக்கிவிடும் வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் அ.தி.மு.க. அல்லக்கைகள் மட்டுமல்ல, அதையும் தாண்டிய அறிவாளிகளும் நம்மிடம் பரப்பும் மர்மக்காய்ச்சல் “யார்தான் யோக்கியன்? யார்தான் ஊழல் செய்யல?”
அரசியலைப் பகுத்தறிய வாய்ப்பில்லாத மக்கள், அரசியலின் வர்க்கத்தன்மையை பரிசீலிக்க வழியின்றி அன்றாட வாழ்க்கையில் நெருக்கப்படும் மக்களின் இரக்க உணர்ச்சியையும் சுரண்டிக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் அ.தி.மு.க. திருடர்களைவிட கொடியவர்கள் தங்களை கட்சிசார்பற்றவர்களாகவும், வர்க்கச் சார்பற்றவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஊடக, பத்திரிகை உலக பிழைப்புவாதிகள்.
வைத்தி - ஜெயா
திருடர்களைவிட கொடியவர்கள் தங்களை கட்சிசார்பற்றவர்களாகவும், வர்க்கச் சார்பற்றவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஊடக, பத்திரிகை உலக பிழைப்புவாதிகள்.
“மக்களின் இரக்க உணர்ச்சியை சுரண்டுவதைவிட கேவலமான சுரண்டல் வேறில்லை!” என்று கார்ல்மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்தக் கேவலமான கேடிகளுக்கு கவுரமான பெயர் பத்திரிகையாளர்கள், சமூக விமர்சகர்கள், அறிஞர்கள் என்றால் கூட்டத்தில் செயின் திருடனுக்கே கோபம் வரத்தான் செய்யும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அமலானபிறகு, அதனால் பயன்பெற்ற வர்க்கங்கள் “அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!” என ஊழலில் சமத்துவம் பேச ஆரம்பித்துவிட்டது. கருணாநிதி குடும்பம் யோக்கியமா? 2ஜி என்ன? என இன்னொரு ஊழலை முன்னிறுத்தி மடக்குப்பிடி போடுவதன் மூலம் இவர்கள் சொல்லவரும் கருத்து என்ன? எதார்த்தத்தில் விஸ்வரூப வாகிணி ஜெயலலிதாவின் கொள்ளை அடிப்படையும் சகஜமாக எடுத்துவிட்டு போங்க! என்பதுதான் இவர்களின் ஊழல் சரக்கும்! இந்தக் கருத்து ஊழலை மக்கள் மீதும் திணிப்பதில் அ.தி.மு.க. காரனை விட அயோக்கியனாக களமிறங்கி வேலை செய்கிறார்கள் ஊடகப்பிறவிகள்.
“எங்க அம்மா மட்டுந்தான் குற்றம் செஞ்சாங்களா? திட்டமிட்ட சதி!” என்று டீக்கடையில் பேசும் அ.தி.மு.க. பங்காளியின் குரல்தான், அங்கங்கே தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விவாதிக்கும் அறிவுலக விற்பன்னர்களின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.
நீதிபதியை அர்ச்சிக்கும் போஸ்டர்
“எங்க அம்மா மட்டுந்தான் குற்றம் செஞ்சாங்களா? திட்டமிட்ட சதி!” என்று டீக்கடையில் பேசும் அ.தி.மு.க. பங்காளியின் குரல்தான், அங்கங்கே தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விவாதிக்கும் அறிவுலக விற்பன்னர்களின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.
“கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா என்று அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அம்பானி, டாடா, அதிகாரிகள், கலெக்டர், தாசில்தார்கள், கார்ப்பரேட் முதலாளிகள் போன்ற ஊழல் கூட்டாளிகளையும் கைது செய்! சிறையில் அடை! சொத்துக்களை பறிமுதல் செய்!” என்ற நியாயமான தர்க்கமுடிவிற்கு வரவேண்டியவர்கள், எந்த சமூகப் பிரச்சனைகளையும் விவாதம் என்ற பெயரில் நீர்த்துப்போகச்செய்வது, அதன் அடிப்படையான விசயத்தை தொடாமலேயே திட்டமிட்டு திசை விலக்குவது என்ற நவரசங்களிலும் ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகளைவிட அபாயகரமானவர்கள் இந்தவகை ஊடக ஆதாயக் கும்பல்கள். கூலிக்கு ஒப்பாரி வைக்கும் கும்பலைவிட கொடியவர்கள் கூலிக்கு நிகழ்ச்சி நடத்தும் ஊடக வாடகை ஜென்மங்கள்!
சொத்துக்குவிப்பு வழக்கு என்று சொன்னால் கூட தெய்வகுத்தமாகி விடும் என்று ‘சொத்துவழக்கு’ என்ற சொல்லாட்சியால் வாளைச் சுழற்றும் ‘ஆயுத எழுத்து’ தினத்தந்தி பாண்டேவை, தினமணி வைத்தியின் எழுத்தாயுதம் எப்படி விஞ்சுகிறது பாருங்கள், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை அவர் மீது பரவலாக அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, பெருமளவு கோபத்தையோ, வெறுப்பையோ ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை… ( 29.9.2014, தினமணி தலையங்கம்)”, ‘கொள்ளை ஆசை’ என்பது இதுதான் போலும்!
ஊரறிந்த ஊழலை குப்புற விழுந்து கும்பிடும் இந்த ‘ஜெயாசனத்திற்குப்’ பேர் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாம்! எப்போதும் இழவு விழந்த மாதிரியே முகத்தை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கஷ்டம் வைத்தி மாமாவுக்கு இல்லை, நாலு வார்த்தையை சுழட்டிவிட்டே நல்லபெயர் வாங்கும் தந்திரம் அவாளுக்கே உசிதம்!
ஜெயலலிதாவுக்கு சாமரம்
ஊரறிந்த ஊழலை குப்புற விழுந்து கும்பிடும் இந்த ‘ஜெயாசனத்திற்குப்’ பேர் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாம்!
அப்துல்கலாமைப் போல அடிக்கடி பள்ளி கூடத்து பிள்ளைகளிடம் போய் அறம் ஒழுக்கம், என்று அலப்பறை கொடுக்கும் பத்திரிகா தர்மத்தின் பதியின் குரலை மேலும் கேளுங்கள்
“ஜெயலலிதாவுக்கு எப்போதும் ஒரு ராசியுண்டு, மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்துமுறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை”.
ஜெயாவின் பரம்பரை ஜோசியரை விஞ்சிவிட்டது வைத்தியின் அருள் வாக்கு! சிந்தனைக்கான வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கும் ஒரு அ.தி.மு.க. கூலியின் மண்சோறு வேண்டுதலுக்கும் கீழே இருக்கிறது நடுநிலை வேடமிடும் பத்திரிகையாளனின் பிழைப்பு! தெரிந்தே ஊழலுக்கு தீபதூபம் காட்டும் இந்த முதுகெலும்பு அற்ற வர்க்கம்தான் அரசியலை சாக்கடை என்றும், “ஐயம் நாட் இண்ட்ரஸ்டட் இன் பொலிட்டிக்ஸ்” என்றும் வசனம் பேசுவதும், வாய்ப்புக்கு காத்திருக்கும் ஊழலின் இன்னொரு வகைமாதிரிதான்.
ட்சி அரசியல் எல்லாம் ஊழல், பக்கச்சார்புடையது, நடுநிலை சிந்தனையாளர்கள், நடுவாந்திர ஜனநாயகவாதிகள் என்று பாவனை காட்டும் சமூக விமர்சகர்களையும் ஜெயாவின் ஊழல் வழக்கும், தண்டனையும் சேர்த்தே அம்பலமாக்குகிறது. தமிழ் இந்துவில் கட்டுரை எழுதும் சமஸ், ஜெயாவின் தீர்ப்பை ஒட்டி “எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?” என்று தெய்வத்திடம் வேறு மாதிரி வருத்திக்காட்டுகிறார்.
கையும் களவுமாக பிடிபட்ட திருடனை பரணில் உட்கார வைத்துவிட்டு, திரண்டு வந்த மக்களிடம் நீங்கள் யோக்கியமா? என திகைக்கவைக்கும் தத்துவ விசாரணையில் நாஞ்சில் சம்பத்தையே அணுக்கத் தொண்டராக்கிவிட்டார் சமஸ்! தனது கட்டுரையில், ஊழலை ஒரு சமூகப் பிரச்சனையாக நீட்டி முழக்கி மக்களின் மனசாட்சியை உலுக்கும் சமஸ், கடைசிவரை கண்ணுக்கு முன்னே எழுந்தருளியிருக்கும் ஊழல்தெய்வம் ஜெயலலிதாவின் பொது அமைதிக்கு பங்கம் வராமல், பொதுமக்கள்தான் இந்த நிலைக்கு காரணம் என்று அறச்சீற்றத்தை அம்மாவுக்கு அடக்கமாக இறக்கி வைப்பதில் இந்துவின் எடைக்கு எடை சமஸ் கச்சிதமாக பொருந்துகிறார்.
இந்து ராம் - ஜெயா
அறச்சீற்றத்தை அம்மாவுக்கு அடக்கமாக இறக்கி வைப்பதில் இந்துவின் எடைக்கு எடை சமஸ் கச்சிதமாக பொருந்துகிறார்.
கட்சி அரசியல், பக்கச்சார்புக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் வகையினரை ஒத்த சமஸ் இவைகளோடு தனது வர்க்கச் சார்பையும் காட்டிக்கொண்டதற்கு நாம் கட்டாயம் நன்றி சொல்லத்தான் வேண்டும். நடப்பில் ஜெயாவின் ஊழல் தண்டனையை ஒட்டி கட்டுரை எழுத வந்தவர், முத்தாய்ப்பாக, இந்த கடையடைப்பு, கலவரச் சூழலில் அதிக கட்டணம் கேட்ட ஆட்டோக்காரர், பால் கவரை கூடுதல் விலைக்கு விற்ற கடைக்காரர் இவர்களை குறிப்பாக அடையாளப்படுத்தி இப்படி இருக்கும் நாட்டில், இதற்கான அடிப்படைகளாய் விளங்கும் மக்களுக்கு என்ன தண்டனை? என்று உழைக்கும் மக்கள்தான் முக்கிய குற்றவாளிகள் போல் தீர்ப்பை எழுதுகிறார் ஆளும்வர்க்க சேஷ்ட குமாரன்!
இவருக்குத் தெரியாதா? ஊழலின் ஊற்றுக் கண்கள், அதை உருவாக்கும் ஆளும் வர்க்க, அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், கார்ப்பரேட் முதலாளிகள் என்பது. இவர்கள் அடிபணியும் இந்த மொத்த முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பே ஊழலில் புழுத்து நாறும்போது, மக்களையும் ஊழல்படுத்தி வழிக்கு கொண்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பில், கடைக்கோடியில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை சமப்படுத்துவதன் மூலம், “அம்மா மட்டுமா ஊழல்” என்ற அ.தி.மு.க. கழிசடைகளின் சித்தாந்த வார்ப்புதான், பக்கா வர்க்கச்சார்புள்ள சமஸ்சும் என்பதை புரியவைத்த தெய்வத்தின் பராக்கிரமமே பராக்கிரமம்!
மஸ் போன்ற சமர்த்தான சமூக விமர்சன கர்த்தாக்களின் கதியே இப்படி எனில், சகல வழிகளிலும் நுண்மாண் நுண்புலத்தோடு ஆராய்ந்து பிழைக்கத்தெரிந்த அறிஞர்களின் வல்லமையை நம்மால் அளக்கவே முடியாது, இந்தக் கூட்டத்தில் அடக்கவே முடியாமல் ஜெயாவின் கைதுக்காக தினமணியின் நடுபக்கத்தில் அங்கப்பிரதட்சனம் செய்த அறிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்.
அண்ணன் சாதாரண ஆள் இல்லை! கொங்கு மண்ணின் தங்கத் தமிழறிஞர், வானம்பாடி இயக்கத்தின் முன் தேதியிட்ட முற்போக்காளர்! கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம், சிறு தொழிலாளர்கள் போராட்டம், விசைத்தறி தொழிலாளர் போராட்டம் எதிலுமே பொத்துக்கொண்டு வராத அறிஞரின் ‘சிந்தனை அலைகள்’ ஜெயலலிதாவின் கைது ‘சிந்தனை அலைகளை’ எழுப்பியுள்ளதாக சீற்றம் கொள்கிறார்.
குற்றமும் தண்டனையும்” என்ற தஸ்தோவ்ஸ்கியின் நாவல் தலைப்பையே அம்மாவின் கைது பற்றிய தனது கட்டுரைக்குச் (1.10.2014, தினமணி) சூட்டுகிறார் எனில் அறிஞரின் சர்வதேச அறிவின் ஆழ, அகலத்தை ஆராய்ந்து நம்மால் மீளவும் முடியுமோ? “கர்நாடக நீதி மன்றத்தின் தீர்ப்பு, நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு” என்று நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறார் சிற்பி.
சோவுடன் ஜெயா
“கர்நாடக நீதி மன்றத்தின் தீர்ப்பு, நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு”
குவார்ட்டரை ஏத்திக்கொண்டு ரோட்டுக்கடையை எத்தி உதைக்கும் அ.தி.மு.க. போதைகளே மக்களை அதிர்ச்சிக்கும், சிந்தனைக்கும் உள்ளாக்கும் போது, மெத்தப்படித்த சிற்பியால் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாதா என்ன? அதுசரி இந்த நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்களை எங்கே போய் தேடுவது டாஸ்மாக் கடையிலா? தேவையில்லை நாங்களே நடமாடும் சரக்குதான் என்பதுதான் சிற்பியின் அற்புதம்!
எந்தவிதமான முறைமைகளும் நீதிநெறி வழி முறைகளையும் பின்பற்றாமல் சொத்துக்களை குவித்த ஜெயலலிதாவிற்கு “வெறும் சட்டங்களின் இரக்கமற்ற சிட்டகங்களைத் தாண்டி கருணையும் இயற்கை நீதியும் கலந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும்…” என்றும் மனுதர்ம நீதியை சுட்டிக்காட்டி ‘வருண வேறுபாடுகளுக்கு ஏற்ப நியாயங்களும் வகுப்பிட்டிருந்தன’ என்று அளந்துகொட்டி ஆகவே வரலாற்று வழியில் பார்ப்பனரை தண்டிக்கக் கூடாது, தண்டனையும் கருணையாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்த கருப்புப் பார்ப்பனரின் கடைந்தெடுத்த கருத்துப் பொழிவு!
மக்களுக்காகப் போராடுபவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, முதல் முறையாகவே குண்டர் சட்டத்தை பிரயோகிப்பது, விசாரணைக் கைதியாகவே சிறைக் கொட்டடியில் அடைப்பது என்பதை அமல்படுத்தும் அம்மாவின் ஆட்சிக்கு எதிராக எந்த அற உணர்ச்சியும் தோலில் உறைக்காத அறிஞருக்கு, கேள்வி கேட்க ஒரு நாளாவது மனிதனாக மாறாத மா-சிந்தனையாளருக்கு ஊழல் வழக்கில் சட்ட, விசாரணை, நீதி பரிபாலன அடிப்படையில் தண்டிக்கப்பட்டிருக்கும் அம்மாவுக்காக மட்டும் அற உணர்வு வருகிறது எனில் இது வர்க்கப் பாசமா? வாழ்நலன் யோக்கியதையா? இல்லை வருங்கால வைப்பு நீதியா? என்பதெல்லாம் பட்டிமன்றக் கேள்விகள்.
தமிழைப் பேசிப் பிழைத்த இடங்களில் எல்லாம் “அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும்” என்ற சிலப்பதிகார வசனங்களைப் பேசி கைதட்டல்கள் வாங்குவது, ஒரு ஊழல் கொள்ளைக் கூட்டத்துக்காக பாஞ்சாலிசபதம் போடுவது, என்று படம் காட்டுவதில், இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆரையே விஞ்சிவிட்டார் இந்த நாடோடி மன்னன்!
ஊழல் செய்தது உண்டா? இல்லையா? என்ற எதார்த்தக் கேள்விக்கு முன் ஜெயலலிதாவின் கட் அவுட்டை நிற்க வைக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த அறிஞர், முதலில் அதற்கு பதில் சொல்லாமல், “தேர்தல்களத்தில் அடுக்கடுக்காக அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றதால், காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனையிலும், ஈழத்தமிழர் பிரச்சனையிலும் தமிழகத்தில் போராளித் தன்மை மிக்கத் தலைவராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதால், ராஜபக்சேவும் குதூகலிக்கும் வண்ணம் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது என்று ஜெயலலிதாவின் சீலைத்துணியில் முளைகட்டிய தானியமாக முளைத்து வெளிக்கிளம்புகிறார்.
jaya-god-page
“அறுபத்தாறு கோடி ரூபாய் அளவுக்கு மீறிச் சம்பாதித்தார்கள், என்று குற்றம் சாட்டி, நூறு கோடிரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை, ஆறாண்டு தேர்தல் தடை என்ற கொடூரமான தீர்ப்பை – ஒரு அரசியல் தலைவரின் எதிர்கால அழித்தொழிப்பை நல்ல உள்ளங்கள் நிச்சயமாக ஏற்காது” என்று தமிழகத்தையே தழு தழுக்க வைக்கிறார் அறிஞர்.
அம்மா குவார்டருக்கு சைடிஸ்சாக ஒரு ஊறுகாய் மட்டையை தட்டி விடுவது போல கடைசியாக “ஊழல் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும், ஆனால் தண்டனை டிராஸ்கியின் படுகொலை போல அரசியல் பழிவாங்கலாக தாழ்ந்து போகலாகாது” என்று ஒரு மட்டரகமான பிட்டு வேறு! போகிற போக்கில் தனது முட்டாள்தனத்தின் மேதமையைக் காட்ட ‘டிராஸ்கி படுகொலை’ என்று அவதூறை அள்ளி வீசி அம்மாவின் உண்மை விசுவாசியாக சர்வதேச போர்ஜரி வேலை வேறு!
ஊரறிந்த கொள்ளைக்கும்பலுக்கு உரையாசிரியான பிறகு சிற்பிக்கு செதுக்கத் தெரியாமலா போய்விடும்! பாசிச தாய்க்கு பல்லக்கு தூக்கும் பட்டத்துக் கூலிக்கு சோசலிச அரசை போகிற போக்கில் புரணி பேசுவதை விட பேசாமல் அம்மா ஒப்பாரிக்கு ஆள்பிடிக்க போகலாம்!
ஒரு வட்டச் செயலாளராக இல்லாமயே என்னமா பிட்டப் போடுறான்யா, என்று அதிர்ச்சியடையும் அ.தி.மு.க. தொண்டனை விஞ்சத் துடிக்கும் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களே நீங்கள் அம்மாவை இழந்து தவிக்கும் தவிப்பு எங்களுக்கும் புரிகிறது. எதற்கு இத்தனை விதமாக எழுதிப்புலம்பல், இலக்கிய தம்கட்டல்கள்… ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கேனும், ஒரு வத்திப்பட்டியும் உங்களுக்கு கிடைக்கவில்லையா என்ன! யார் தடுத்தார்கள்?
சிற்பி மட்டுமா? இன்னும் பல சிந்தனையாளர்களும் நம்மைத் துரத்துகிறார்கள்… மக்களே, சுற்றிப் பாருங்கள், அம்மா மட்டுமா ஊழல்?… இதோ வரிசையில் அறிஞர்கள்!
- துரை.சண்முகம்

கருத்துகள் இல்லை: