வியாழன், 27 மார்ச், 2014

டி.ஆர் பாலு: காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் …அழகிரியும் காங்கிரசும் சேரகூடாது அதான்

கலைஞரும் பாலுவும் திடீரென்று காங்கிரஸ் மீது காதல் தான் கொள்வது வெறும் பொய் காதல்தான் ,எல்லாம் அழகிரிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தந்துவிட கூடாது என்ற மிக உயர்ந்த நோக்கம் தான் .
சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று டி.ஆர்.பாலு ஆருடம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வின் தஞ்சை தொகுதி வேட்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணி அமையும்" என்று அவர் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து ஆதரவு நிலை எடுத்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு. டி.ஆர்.பாலு சாபவிமோசனம் தஞ்சை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு. தஞ்சையை அடுத்து, கண்டியூரிலுள்ள கரசாப விமோசன பெருமாள் ஸ்வாமி கோவிலில், கடந்த 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். இதை, படம் பிடித்த டி.வி., சேனல் நிருபரிடம் இருந்து கேமரா 'சிப்'பை, டி.ஆர்.பாலு உத்தரவின்பேரில் தி.மு.க.,வினர் பறித்தனர். சிப் ஒப்படைப்பு இது குறித்த தகவல் ஊடகங்கள், பத்திரிக்கை வாயிலாக வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து, பறிக்கப்பட்ட கேமரா சிப்பை டி.ஆர்.பாலு ஒப்படைத்தார்.  கலைஞரும் காங்கிரசை மன்னிப்போம் என்ற கருத்தில் கூறியது இதற்காகத்தான் , அழகிரியின் வேகம் எங்கே போகும் என்பது நன்றாகவே விளங்கி விட்டது, தேர்தலில் வெல்வது இரண்டாம் பட்சம் ஆனால் அழகிரி தலை தூக்க கூடாது , இதுதானே தற்போது உள்ள பிரயோரிடி ?
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: