செவ்வாய், 3 டிசம்பர், 2013

டீன் ஏஜ் பெண்கள் அதிகம் புகைக்கிறார்கள்! சென்னை, பெங்களூர், மும்பை, புனே போன்ற நகரங்களில்

சென்னை, பெங்களூர், மும்பை, புனே போன்ற நகரங்களில் சாப்ட்வேர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் தனியாக தங்கி வேலை செய்து சம்பாதிக்கின்றனர். அதே போல, ஆண்களைப் போலவே டீன் ஏஜ் பெண்களும் புகைப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார்கள். பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பையில் பொது இடத்தில் டீன் ஏஜ் பெண்கள் புகைப்பிடிப்பது அதிகரித்துள்ளதாம். 2005ல் 1.5 சதவீதம் பெண்கள் மட்டுமே புகைப்பிடிப்பவர்கள். இப்போது, 5 கோடி பெண்கள் புகை பிடிப்பவர்களாம். இந்தியாவில் ஒருநாளைக்கு பெண்கள் மட்டுமே ரூ.100 கோடிக்கு புகையை ஊதி கரியாக்குகிறார்கள் என்கிறது அதிர்ச்சி ரிப்போர்ட். சென்னையிலும் பல ஐடி பார்க்களில் பெண்கள் சிகரெட் பிடிப்பதை காண முடிவதே இதற்கு சாட்சி

கருத்துகள் இல்லை: