புதன், 5 ஜூன், 2013

UN REAL எஸ்டேட் விளம்பரங்களை வெளியிடும் அதிபர்களுக்கு ஜெயில்

ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ‘ரியல் எஸ்டேட்
(ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) மசோதாவுக்கு’ மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஒரு கட்டுமான திட்டம் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெற்ற பிறகே, அத்திட்டத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொடங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அனுமதிகளை ஒழுங்குமுறை அமைப்பிடம் சமர்ப்பித்து,
அதை இணையதளத்தில் வெளியிட்ட பிறகே கட்டுமானத்தை தொடங்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அந்த அனுமதிகளை பெற்ற பிறகே, வீடு வாங்குவோரிடம் பணம் வாங்க வேண்டும். மேலும், திட்டம் தொடர்பாக பொய் விளம்பரங்களை வெளியிட்டால், அந்த திட்டச்செலவில் 10 சதவீதம்வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே தவறை செய்தால், ஜெயில் தண்டனை அளிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: