செவ்வாய், 13 நவம்பர், 2012

லண்டனில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை?

பிராண்சில் கடந்த வியாழக்கிழமை புலிகளின் உள்வீட்டுப்பிணக்கில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் புறநகர்ப் பகுதியான லூசியம் எனுமிடத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால் மறுநாள் காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. பொலிஸார் சம்பவ இடத்தில் திரட்டிய தடயங்களுடன் விசாரணைகளை முடுக்கியுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.

புலம்பெயர் தேசத்திலே மாவீரர்களின் பெயரால் பிழைப்பு (பிச்சையெடுப்பு) களைகட்டியுள்ளது. மாவீரர்தினம் எனும் பெயரால் இடம்பெறும் வியாபாராத்தில் வருமானத்தை பங்குபோடுவதில் புலம்பெயர் தமிழரிடையே பெரும் குத்துவெட்டுக்கள் இடம்பெறுகின்றது. இக்கொலையும் இதன் அங்கமா என்பது தெளிவில்லை என்றாலும் இக்கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.


கருத்துகள் இல்லை: