ராதா மனோகர் : தந்தை பெரியார் 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தை தொடங்குவதற்கு முன்பே
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் திராவிட அமைப்பும் திராவிட பள்ளிக்கூடமும் திராவிடன் பத்திரிகையும் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து திராவிடத்தை இங்கு கொண்டுவரவேண்டாம் என்று கூறுவோர்க்கு தெளிவாக கூறிக்கொள்கிறோம்!
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே!
அதுவும் 1927 ஆம் ஆண்டிலே திராவிட கருத்தியலும் திராவிட அமைப்பும் திராவிட பத்திரிகையும் அறிமுகமாகி விட்டது!
அதன் முன்னோடியாக இருந்தவர் வழக்கறிஞர் திரு சு. இராசரத்தினம் அவர்கள்!
அவரது படங்கள் இப்போதுதான் நமக்கு கிடைத்தது.
அவற்றில் ஒன்றுதான் இப்போது நீங்கள் பார்ப்பது!
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
அதுவரை வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
இலங்கை திராவிட அரசியலின் ஆரம்ப நிகழ்வுகளாக திராவிட வித்தியா அபிவிருத்தி சபை
திராவிட வித்தியாசாலை
திராவிடன் பத்திரிக்கை ஆகியவற்றை குறிப்பிடலாம்,
இவை திராவிட கொள்கைகளையே முன்னெடுத்து ஆரம்பமானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்!
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை ஜனநாயக வாக்களிக்கும் உரிமை போன்றவை மட்டுமல்லாமல் முக்கியமாக சுயமரியாதை கருத்துக்களை தாங்கியே திராவிடன் பத்திரிகையும் வெளியனது என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.
திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை பற்றி ஒரு தலையங்கமே எழுதிய வரலாறு எல்லாம் உண்டு!
இது பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்
மீள் பதிவு : 27 November 1927 Chunnakam Jaffna சுன்னாகம் திராவிட வித்தியாசாலை" யாழ்ப்பாணம் வட்டுக்கோடடையை சேர்ந்த திரு மு.சி .ராசரத்தினம் 1905 இல் கல்கத்தா பல்கலை கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பி 1906 ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆசியராக பணியில் இணைந்தார். பின்பு வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
அதே காலக்கட்டத்தில் சட்டம் பயின்று 1911 ஆண்டு வழக்கறிஞராகவும் பணியாற்ற தொடங்கினார்.
1923 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்தி சங்கம் ஏற்படவும் காரணமாக இருந்தார் . சம்பந்தர் வித்தியாலயம் திருநாவுக்கரசர் வித்தியாலயம் என்பன சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உருவானவையாகும்.
சைவ வித்தியா விருத்தி பாடசாலைகளில் சைவ சூழ்நிலைகளில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்று கூறப்பட்ட போதிலும் .
அவை தாழ்த்தப்பட்டமாணவர்களை அனுமதிக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் மிஷனரி பாடசாலைகளுக்கே செல்ல முடிந்தது. அத்துடன் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுதலை பெற மதம் மாறி செல்லும் நிலைமையும் இருந்தது.
இந்த நிலையில் அவர்களுக்கு சுயமரியாதையும் கல்வியும் முன்னேற்றமும் கிடைப்பதே அவசியம் என்று உணரப்பட்டது.
அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் 1926 இல் உருவானது. .
அச்சங்கத்தின் ஆரமப தலைவராக திரு மு சி ராசரத்தினம் இருந்தார் . அக்காலத்தில் அவர் சைவ வித்தியா விருத்தி சங்க செயலாளராகவும் இருந்தார்.
அதே சமயம் சம ஆசனம் . சமபந்தி போசனம். ஆலைய நுழைவு போராட்ட காலங்களுக்கு முன்பிருந்த சாதீய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்தி கொண்டு மு சி ராசரத்தினம் செயல்ப்பட்டார் என்பதை கவனிக்கவேண்டும்.
1927 இல் காந்தியார் இலங்கைக்கு வந்த பொழுது வரவேற்பு குழுவில் ராசரத்தினமும் இருந்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் சங்கமே பின்பு திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கமாக உருவெடுத்தது!
இந்த சங்கத்தின் சார்பில் ஆரம்பிக்கப்படட பள்ளிக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 27 - 11 -1927 இல் நடந்தது.
அந்த பாடசாலையின் பெயர் "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை"
இப்பாடசாலை கட்டுவதற்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த இந்து போர்ட் ( சைவ வித்தியா விருத்தி சங்கம்) எட்டு மாதங்களாகியும் உறுதி அளித்தபடி நிதி அளிக்கவில்லை என்று 1928 திராவிடன் ஆவணி இதழில் மனவருத்தத்துடன் ஆசிரிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.
( 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.)
இந்த பதிவில் இங்கே குறிப்பிட்டிருப்பது சிறு குறிப்பு மட்டுமே .இது பற்றி போதிய வரலாற்று செய்திகள் உள்ளன என்று தெரிகிறது . இது பற்றிய விபரங்கள் தெரிந்தோர் பொதுவெளிக்கு இந்த செய்திகளை கொண்டுவரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது
அதன் தலைவராக இருந்த இந்து போர்ட் ராஜரத்தினம் c4 July 1884 – 12 March 1970)
Subramaniam Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election. As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியல் ஆதிக்க ஜாதி அரசியலையே அரசியல் கோட்பாடாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்
இந்த பள்ளிக்கூடங்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை இருந்தது .
இதை ஏற்றுக்கொள்ள மறுத்து இந்த அமைப்பில் இருந்து வெளியேறிய இன்னொரு வழக்கறிஞரான திரு மு.சு. ராசரத்தினம் அவர்கள்,
சுன்னாகத்தில் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பை நிறுவினார் அந்த அமைப்பின் சார்பாக திராவிடன் என்ற மாத பத்திரிகையையும் வெளியிட்டார்
இப்பத்திரிகை தங்கு தடையின்று நான்கு ஆண்டுகள் வெளிவந்தது.
ஜாதி பேதம் இல்லாது எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கற்று கொடுப்பதற்காக திராவிட வித்தியாசாலை என்ற பள்ளிக்கூடத்தையும் சுன்னாகத்தில் நிறுவினார்.
திராவிடன் பத்திரிகையில் சமூக நலன் சார்ந்த பல கட்டுரைகள் செய்திகள் அறிவுரைகள் இடம் பெற்றிருந்தன .
அதில் வெளியான பல முற்போக்கு கருத்துக்கள் அக்காலத்தில் மிகவும் துணிச்சலான விடயங்களாக இருந்ததை காணலாம் .
இந்த தரவுகள் அடிப்படையில் நோக்கும்போது சமூக அரசியல் தளத்தில் முதல் முதலாக அங்கு உருவான அரசியல் இயக்கம் திராவிட இயக்கம்தான் என்பது மிக தெளிவாக தெரிகிறது
இந்திய சுதந்திர இயக்கம் பற்றிய செய்திகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் கூட அவையெல்லாமே ஒரு தெய்வீக தோற்றம் போன்ற புனித வழிபாடு என்ற அளவிலேயே காட்சி அளித்தது.
எந்த இடத்திலும் அது ஒரு அரசியல் முன்னெடுப்பு என்ற கருத்தே எங்கும் காணப்படவில்லை
நீக்கமற நிறைந்திருந்த தென்னாடுடைய சிவனும் முருகனும் ஒரு புறமாகவும் .
கிறிஸ்வ மிஷனரிகளின் பரலோகத்து பிதாவின் மகிமையை போற்றும் விதமான செய்திகள் மறுபுறமுமாகவும் இருந்த காலங்கள் அவை.
சைவர்களின் கல்வி ஜாதி சேற்றுக்குள் சிக்கியது போல கிறிஸ்த்தவ மிஷனரிகளின் கல்வி ஜாதி சேற்றுக்குள் சிக்கவில்லை.
இவ்விரண்டு மதங்களில் சிக்கியிருந்த மக்களின் ஒரு சமூக கலாச்சார அறிவியல் புரட்சியாக திராவிட கருத்தியல் வழக்கறிஞர் திரு சு . ராசரத்தினம் அவர்களால் முன்னெடுக்கபட்டது இவர் மட்டுமல்ல இவரோடு பலர் துணையாக இருந்திருக்கிறார்கள்
இந்த நிலையில் 1935 டிசம்பர் 18 ஆம் தேதி இலங்கையின் முதல் இடது சாரி அமைப்பான லங்கா சமசமாஜ கட்சி உதயமானது .
இலங்கை கம்யூனிஸ்டு கட்சி 1943 ஜூலை 3 ஆம் திகதி உதயமானது
திரு பொன் . கந்தையா திரு ஆ வைத்திலிங்கம் திரு நா சண்முகதாசன், திரு மு.கார்த்திகேசன் போன்ற தமிழர்கள் இதில் இயங்கினார்கள்
இதே காலக்கட்டங்களில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம். திராவிடர் கழகம் போன்றவை பெருமளவு வளர்ச்சி பெற்றன
தமிழ்நாட்டில் இடது சாரி இயக்கங்கள் முழு மூச்சுடன் இயங்கினார்கள் .
ஆனாலும் கோட்பாடு அடிப்படையில் திராவிட இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஊடுருவிய அளவுக்கு இடதுசாரி இயக்கங்களுக்கு ஊடுருவ முடியவில்லை
வெறும் பொருளாதார வர்க்க பேதத்தை மட்டுமே மக்களின் பிரச்சனையாக கருதிய மாக்சியத்திற்கு ஆரிய ஜாதீய அமைப்பின் இயங்கியல் பற்றிய தெளிவு இன்மையால் அது போதியளவு நகர முடியாமல் போய்விட்டது
ஆரிய ஜாதி கட்டுமானத்தின் கோட்பாடு அத்திவாரத்தை புடுங்கி எறிந்த திராவிட கோட்பாடு அங்கு வெற்றி அடைந்ததில் வியப்பில்லை.
ஆனால் இலங்கையில் இடதுசாரிகள் சைவ கிறிஸ்தவ அரசியலுக்கு மாற்றாக இடது சாரி அரசியலை முன்னெடுத்ததில் ஓரளவு வெற்றி பெற்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது .
இலங்கை இடதுசாரிகள் பெரும்பாலும் ஒரு மேட்டுக்குடி மென்மையான இடதுசாரிகளாகவே இருந்தார்கள்!
அதனால் மக்கள் தோற்றுவிட்டார்கள் என்றும் தோன்றுகிறது .
சைவ கிறிஸ்தவ அரசியல் சக்திகள் இடது சாரிகளுக்கு ஊக்கமும் கொடுத்தார்கள்!
அந்த காலத்தில் சைவர்களின் கம்யூனிசம் என்பது ஒரு கஞ்சசஷ்டி கம்யூனிசம் என்று வேடிக்கையாக குறிப்பிடும் அளவுக்கு சைவம் சார்ந்துதான் இருந்தது!.
இடதுசாரிங்களை கூட யாழ் சைவம் பெரிதாக எதிர்க்கவில்லை!
ஆனால் அவர்கள் ஈ இருக்குக்ம் இடம் கூட தர முடியாது என்று துடைத்து எறிந்தது திராவிட அரசியலைத்தான்!
.
திராவிடத்தின் சுயமரியாதையை சமூக நீதி பகுத்தறிவு பற்றிய பயம் காரணமாக இருக்கலாம்
உள்ளூர ஜாதி கட்டுமானத்தின் மீதான பிடிப்பு அவர்களுக்கு இருந்திருக்கலாம்
அதனால் அந்த ஜாதியத்தின் இருப்பையே கேள்விக்கு உரியதாக்கிய திராவிட கருத்துக்கள் வேப்பங்காய் ஆனதில் வியப்பில்லை
1927 ஆம் ஆண்டே யாழ்ப்பாணத்தில் அழுத்தமாக கால் பதித்த திராவிட இயக்கமானது பின்பு வந்த இடதுசாரி இயக்கத்தாலும் தமிழ் தேசிய இயக்கத்தாலும் காணாமல் ஆக்கப்பட்டு விட்டது போலத்தான் தெரிகிறது
தமிழ்நாட்டில் பெற்ற தோல்வியை யாழ்ப்பாணத்தில் சரி செய்துவிட்டார்கள் போலும்.
மீள் பதிவு : திராவிட வித்யா அபிவிருத்தி சங்கம்
திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம்
திராவிடன் (மாத பத்திரிகை) -9 ஏப்ரல் 1927 சுன்னாகம்
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம்
கீழ்கண்டிருக்கும் கனவான்கள் தாங்கள் இச்சங்கத்தின் போஷகர்களாக இருப்பதற்கு சம்மதப்பட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ மான் சேர் அம்பலவாணர் கனகசபை அவர்கள்
2. கௌரவ ஸ்ரீமான் துரைசாமி அவர்கள்.
3. கௌரவ ஸ்ரீ மான் எஸ் ராஜரத்தினம் அவர்கள்
4. கௌரவ ஸ்ரீ மான் தா மு. சபாரத்தினம் அவர்கள்
இப்பொழுது நாங்கள் சங்கம் தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள் ஆகிறது.
பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அலுவல்கள் நடந்து வருகிறது.. சங்கத்திற்கு புதிய அங்கத்தினர்கள் தொகையாக சேர்க்கிறார்கள்.
சென்ற மாதத்தில் மயிகம்பட்டி, மயிலணி என்னும் இடங்களில் கிளைச்சங்கங்கள் ஏற்படுத்த பட்டன.
அங்கத்தினர்கள் தயவு செய்து தங்கள் மாதாந்த கட்டணங்களை கொடுத்து ரசீது பெற்றுகொள்ளவும்.
சித்திரை மாதம் பள்ளிக்கூடத்திற்கு அத்திவாரம் போடுவதற்கு தீர்மானிக்க பட்டிருக்கிறது.
இதை குறித்த விஷயங்களாய் துண்டு பத்திரிகைகளில் காணலாம்.
விஷேச அறிக்கை!
இந்த யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்படும் தாழ்த்தப்படுமிருக்கும் சாதியர்களாகிய நாங்கள் சீர்திருத்தம் கல்வி இன்றி இருக்கும் நிலையை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
உங்களுக்கு உங்களை சீர்திருத்தி கொள்வதற்கும் மற்றைய சாதிகளை போலவே முன்னேற்றம் அடைய விருப்பம் இருந்தால் இச்சங்கத்தின் சேருங்கள்.
ஒரு சங்கத்தில் சேர்ந்து தாங்கள் ஐக்கியமாக இருந்து ஒத்துழைத்தால் எப்படி முன்னேற்றம் அடையாளம் என்று சேர்ந்த பிறகுதான் விளங்கும்.
எங்களுடைய மக்களை படிப்பிப்பதற்காக ஆங்கிலமும் தமிழும் படிப்பிக்க கூடிய ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்துவது எங்களுடைய கோரிக்கை.
எங்களில் தட்டுக்கெட்டவர்களும் சேர்வதற்கு வசதியாக பிரவேச கட்டணமும் மாதாந்த கட்டணமும் சதம் 25 ஆக ஏற்பட்டிருக்கிறது.
போலி நியாயங்கள் பேசித்திரியும் வீணர்களின் வார்த்தையை நம்பி மோசம்போகாதீர்கள்.
எங்களுடைய கஷ்டங்களையும் நிர்பாக்கிய நிலைமையையும் யாவரும் அறியும்படியாகவும் எங்கள் முன்னேற்றத்திற்காக வேண்டிய வழியாகவும் சங்கத்தால் வெளிவரும் "திராவிடனை" ஆதரியுங்கள் .
திராவிடன் யாவராலும் வாங்கி வாசிக்கும் பொருட்டு செலவை கருதாது மிகவும் குறைந்த சந்தாவாக வருஷம் ஒன்றுக்கு தபாற் கூலி உட்பட 1-25 ஆகவும் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
சங்க கொம்மிற்றியார்
இந்த பதிவின் மூலம் திராவிடன் பத்திரிகை 1927 ஜனவரி மாதம் முதலாக வெளிவர தொடங்கி உள்ளது என்று தெரிகிறது
ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம் - 1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்!
இதில் சம்ஸ்கிருத கல்வியை ஆரிய பாஷா என்று குறிப்பிட்டனர்.
தமிழ் மொழியை திராவிட பாஷா என்றே குறிப்பிட்டனர் என்பது கவனிக்க படவேண்டிய விடயமாகும்!
1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் கூடிய கல்விமான்கள் உட்பட பெருமளவு மக்கள் கூடிய மன்றத்தில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிரித்தி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது
ஆங்கில அரசின் கல்வி பொறுப்பதிகாரியான திரு எவனாஸ் பிரபு தலைமை வகித்தார்
இந்த சங்கம் அதுவரையில் தமிழ் மொழிக்கு சேவையாற்றி கொண்டிருந்த பலரின் ஆவணங்களையும் ஒழுங்கு படுத்தி பணியாற்றியது
இச்சங்கத்தின் சேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இலங்கை பல்கலை கழகம் அதன் செனெட் சபைக்கு இச்சங்கத்தின் இரு அங்கத்தவர்களை நியமித்தது
சுமார் அரை நூற்றாண்டுகள் இச்சங்கம் தமிழுக்கு அளப்பரிய பணியை ஆற்றியது.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அடிப்படை பண்டிதர் . பால பண்டிதர் மற்றும் பண்டிதர் பரீட்சைகளை நடத்தியது.
பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிட்டது
மற்றும் சங்கத்தினால் நடத்தப்பட்ட வகுப்புக்களை பரீட்சைகள் மூலம் அரும்பணியாற்றியது
தமிழில் பல மட்டங்களில் நடத்தப்பட்ட தமிழ் பண்டிதர்கள் பரீட்சைகளினால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்
சமஸ்கிருதத்தில் சுமார் முப்பது மாணாக்கர்கள் பயன்பெற்றனர்
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சமஸ்கிருதம் பெரிதாக வளரவில்லை
மாறாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றியது
இலங்கையில் தமிழ் ஆசிரியர்கள் பெருமளவு புகழ் பெற்று தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர்
இந்த தமிழ் வளர்ச்சியில் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் பங்கு மிகப்பெரிது.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்கள் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்க பணிகளோடு தொடர்புகளை பேணியே வந்துள்ளனர்
சென்ற நூற்றாண்டு தமிழ் வளர்ச்சியில் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் வகிபாகம் மிகவும் காத்திரமானது.
இந்த கட்டுரையானது ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம் பற்றிய ஒரு சிறு பார்வை மட்டுமே .
இலங்கையில் அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திராவிடம் என்ற சொல்லே இல்லை என்று இன்றும் பல அரசியல் மேதாவிகள் கருதி கொண்டிருக்கிறார்கள்
அல்லது அது பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கிறார்கள்.
திராவிடம் என்ற சொல் யாழ்ப்பாணத்தில் எவ்வளவு நீண்ட வரலாற்றை கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு ஊசாத்துணையாகவே இந்த பதிவு.
திரு .சுப்பிரமணியம் இராசரத்தினம் வழக்கறிஞர்
இலங்கை திராவிட இயக்க முன்னோடி 1927

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக