வெள்ளி, 24 ஜூன், 2022

ராகுல் காந்தியின் அலுவலகத்தைச் சூறையாடிய மர்ம கும்பல்!

நக்கீரன் : கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த ஒரு கும்பல், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியதாக வயநாடு இளைஞர் காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த கும்பலின் கைகளில் இந்திய மாணவர் அமைப்பின் கொடிகள் ஏந்தியபடி இருந்ததாகவும், அவர்கள் கூறியுள்ளனர். ராகுல் காந்தி எம்.பி.யின் அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: