செவ்வாய், 21 ஜூன், 2022

சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம்? தீட்சர் குடும்பம் - போலீசார் விசாரணை!

Natarajar temple Dikshitars child marriage in Chidambaram? -Police investigation!

நக்கீரன் - காளிதாஸ்  : சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவராமன் மகன் கபிலன் இவருக்கும் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 3-ஆம் தேதி கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றது என்றும்,
அதனையொட்டி கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் விருந்தோம்பல் நடைபெற்றதாகவும்  சமூக நலத்துறை அலுவலர் சித்ரா புகார் அளித்தார்.


அதனடிப்படையில் சிதம்பரம் நகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிவராமன், சோ.பானுசேகர், கபிலன், எம்.எஸ் திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீது ஜூன் 20-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தைகள் திருமணத்தை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற குழந்தைகள் திருமணத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: