புதன், 22 ஜூன், 2022

தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

கலைஞர் செய்திகள் : தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்பதும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்குக் கொண்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு!

நீங்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு பணிக்கு நடுவே அர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதியவேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாகக் கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்கத் திட்டவரை படத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.
தூய்மைப் பணியாளர்கள் அமர இடவசதி.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு!

செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள். மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல, மற்ற அலுவலகங்களிலும் பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: