ஞாயிறு, 10 ஜனவரி, 2021

கிரண்பேடிக்கு எதிராக இரண்டாம் நாளாக போராட்டம் முதல்வர் நாராயணசாமியை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு

hindutamil.in :முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு போராட்டக்களத்திலேயே படுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர்கிரண்பேடி மக்கள் நலத்திட்டங் களுக்கு தடை ஏற்படுத்தி முட்டுக் கட்டை போடுவதாகக் கூறி காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சார்பில் மறைமலை அடிகள் சாலை- அண்ணா சிலை அருகே 4 நாட் கள் தொடர் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்வர் நாராயணசாமி தலை மையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று முன்தினம் போராட்ட களத்திலேயே உணவுசாப்பிட்டு அங்கேயே படுத்து உறங்கி விடிய, விடிய போராட் டத்தை தொடர்ந்தனர். அதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ், கூட்டணிக் கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாளவன் எம்பி, பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் போராட்ட களத் துக்கு வந்தனர்.

போராட்டத்தை வாழ்த்தி தொல்.திருமாவளவன் பேசியதாவது:

ஆளுநர், துணைநிலை ஆளுநர் பதவிகள் தேவையில்லை என்பதே எங்கள் கூட்டணிக் கட்சிகளின் எண்ணம். ஆட்சி நிர்வாகத்துக்கு முதல்வர் இருக்கும்போது ஆளுநர், துணைநிலை ஆளுநர் எதற்கு? புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுகிறது. அரசு எடுக் கும் முடிவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நெருக்கடி தருகிறார். இது முதல்வருக்கும் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவாக்குகிறது. ஆளுநருக்கு இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

இப்போராட்டத்தால் ஆளு நரை மாற்றிவிடுவார்கள் என்பது நிச்சயமில்லை. ஊழலுக்கு எதிராக டெல்லியில் அன்னா ஹசாரேநடத்திய போராட்டத்தில் கிரண்பேடி பங்கேற்றார். தன்னை கட்சிசார்பற்றவர் என கூறிக்கொண்ட கிரண்பேடியால் எப்படி பாஜகவில்இணைய முடிந்தது? கிரண்பேடி யின் நேர்மை உண்மையா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர்நேர்மையானவரல்ல, அப்பழுக் கற்றவரல்ல, நடுநிலைவாதி அல்ல. இதை தெரியப்படுத்தவே இந்த போராட்டம்.

பாஜக இந்துக்களுக்கான கட்சிஎன சொல்வார்கள். ஆனால் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத் தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர். விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் தான். மத்திய மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகள் சட்டம், நீட்,ஜிஎஸ்டி போன்றவற்றில் பாதிக் கப்படுபவர்களும் இந்துக்கள் தான்.

சமீபத்தில் நான், முருகன் தமிழ் கடவுள் என்றால் விநாயகர் யார்? என கேள்வி கேட்டேன். உடன் பிறந்தவன் தமிழனாக இருந்தால், அவர்களுக்கு அப்பா, அம்மா யார்? ஏன் வாதாபியில் இருந்து விநாயகர் வர வேண்டும் என கேட்டேன்.

கடவுளுக்கு எதிராகவோ, இந்துக்களுக்கு எதிராகவோ கருத்து கூறவில்லை. இந்துக் கள் பெயரில் அரசியல் செய்வ தைத்தான் கேள்வி கேட்கிறேன். ஏன் அரசியலோடு ஆன்மிகத்தையும், மதத்தையும் கலக்கிறீர்கள்? இந்த நுட்பமான அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: