செவ்வாய், 5 மார்ச், 2019

தமிழை குழிதோண்டி புதைக்க நியமிக்கப்பட்ட பத்மபூஷன் நாகசாமி

நாகசாமி
Sundar P : இந்திய அரசால் “பத்ம பூசன்” விருதளிக்கப்பட்டுள்ள
தொல்லியலாரும், பார்ப்பனருமான இரா நாகசாமி, தன் The Mirror of Tamil and Sanskrit” என்னும் நூலில் முன்வைத்துள்ள முடிவுரைகள்:
1. தமிழ், தன் ஆற்றலால் செவ்வியல் மொழி ஆகவில்லை. சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிட மிருந்து கடன் பெற்று வளர்ந்து செவ்வியல் மொழி எனப்படுகிறது.
2. தொல்காப்பியம் இலக்கண நூலன்று; பரத முனிவரைப் பின்பற்றி எழுதப்பட்ட ,நடனப் பாடல்களுக்கான கருத்தமைந்த தொகுப்பு அது.
3. சிலப்பதிகாரம் வரலாற்றுக் காபியமன்று; அது முழுவதும் புனைந்து கட்டப்பட்ட ஒரு புனை கதை இலக்கியம். அது முழுவதும் நாட்டியப் பாடல்களின் தொகுப்பு.
4. தமிழ் எழுத்துகள் பிராமி என்ற கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து வடிவமைக்கப்பட்டன.
5. தமிழர் 'பா'வும் பரத முனிவரின் ‘யமகம்’ என்ற மடக்கணியைக் கொண்டே வளர்ந்துள்ளன.
6. தமிழர்கள் வேதக் கடவுளர்களையே வணங்குகின்றனர்.
7. தமிழர்க்கெனத் தனி வாழ்வுநெறி இல்லை. வடமொழி, வேதநெறி மரபு வாழ்வையே பின்பற்றி வாழ்கின்றனர்.
8. தமிழரின் கலை , இசை, நடனம், இலக்கியம், எல்லாம் கடன் பெற்றவையே!
9. காலந்தோறும் தமிழ், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளிலிருந்தே கடன் பெற்று வளர்ந்துள்ளது.

அதிலிலுள்ள ஐந்நிலம் என்பது உண்மையான நிலப்பாகுபாடன்று. அது நாடகத்தின் சுவையை மிகுவிக்கப் போடும் பின்னணித்திரை போன்றது..
தமிழ் அகம் , புறம் பற்றிய பாடல்கள் அனைத்துமே நாட்டியமாடப் பின்னணியாகப் பாட எழுதப்பட்ட பாடல்களைப் போன்றனவே ஆகும். எதுவும் உண்மையான வாழ்வு நெறியினின்று கிளைத்தது அன்று.
10. பொதுவாக நாம் இன்று சிறப்புடன் போற்றும் தமிழ்சார்ந்த அனைத்துமே,கற்பனைகளே.
இவற்றை உண்மை என நம்பித் தமிழ் உயர்வு பற்றிப் புகழ்தல் எல்லாம் தவறு.
நன்றி:-
மூதறிஞர் தமிழண்ணல் எழுதி, திரு இராமசாமி நினைவுப் பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராயம் வெளியிட்ட, "தொல்லியல் துறைஞர் இரா. நாகசாமியின், பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்" என்னும் நூலுக்கு,  முனைவர் மு.பொன்னவைக்கோ எழுதிய அணிந்துரை.

Sasi Sasi : உலகில் எங்கு அகழாய்வு நடந்தாலும் தமிழ் மற்றும் தமிழர் வாழ்வியல் சார்ந்த சான்றுகளே கிடைக்கப்பெறுவதால். ஆத்திரமடையும் பார்ப்பனகும்பல் பொய் புனைவுகளை அதிகமாக கூற ஆரம்பித்துள்ளனர். அதில். நாகசாமி நாயும் ஒருவன். சமீபத்தில் ஓமன் நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்வில் சூர் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணிலான மண்பானைகளில் தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எட்டாம் நூற்றாண்டை சார்ந்தவை என அறியப்படுகிறது. தற்போது இவை மஸ்கட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.. உலகில் எங்கு அகழாய்வு நடந்தாலும் தமிழ் மற்றும் தமிழர் வாழ்வியல் சார்ந்த சான்றுகளே கிடைக்கப்பெறுவதால். ஆத்திரமடையும் பார்ப்பனகும்பல் பொய் புனைவுகளை அதிகமாக கூற ஆரம்பித்துள்ளனர். அதில். நாகசாமி நாயும் ஒருவன். சமீபத்தில் ஓமன் நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்
வில் சூர் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணிலான மண்பானைகளில் தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எட்டாம் நூற்றாண்டை சார்ந்தவை என அறியப்படுகிறது. தற்போது இவை மஸ்கட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை: