ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

நடிகர் சரத்குமார் எம்பி ஓய்வூதியத்தை மறுத்து மாநிலங்கள் அவை செயலருக்கு கடிதம்

சென்னை: தனக்கு வழங்கப்படும் முன்னாள் எம்.பி.க்கான ஓய்வூதியத்தை
நிறுத்தக்கோரி மாநிலங்களவை செயலாளருக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார். பிறவழிகளில் வருவாய் பெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வசதி உள்ளவர்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தந்தால் அரசுக்கு பலகோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்றும் ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே ஓய்வூதியத்தை நம்பியுள்ளனர் என்று சரத்குமார் கூறியுள்ளார். தினகரன்

கருத்துகள் இல்லை: