வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தருண் விஜய் எம்பியின் நிறவெறி அம்பலம் ... உதிரம் முழுதும் ஆதிக்க வெறி .. திருமாவளவன் கடும் சீற்றம்!


சென்னை: உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும் என்று தருண் விஜய் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக கூறியுள்ளார். தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கறுப்பர்கள் என வர்ணித்து தமிழர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் தருண் விஜய். அவரை பலரும் அவரது டிவிட்டர் பக்கத்திற்குப் போய் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு: ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், "நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?" என்று கேட்டுள்ளார்.
உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும். கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் காரரான இந்த மனிதரைத்தான் புனிதராகக் காட்டும் முயற்சியில் இங்கு சிலர் ஈடுபட்டுள்ளனர். கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வங்கி அதிகாரிகளைப் பார்த்து, 'பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது அழகி ஆகிவிடுமா?' என்று கேட்டார் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். அதுபோல், 'தமிழுக்கு அரண் தருண்விஜய் என்றும் தலித்களின் குரல் தருண்விஜய் என்றும் கூறி முலாம் பூசுவதன் மூலம், அவரது வர்ணாசிரம கொள்கை மாறிவிடுமா?' என்பதை, அவருக்கு கொடி பிடிக்கும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஷாநவாஸ் கூறியுள்ளார் tamiloneindia

கருத்துகள் இல்லை: