செவ்வாய், 10 ஜூன், 2014

அத்வானிக்கு பாராளுமன்றத்தில் மீண்டும் தனி அறை கிடைத்துவிட்டதாம் , ம்ம்ம் எல்லாம் நேரம் ?

அத்வானியின் தனி அறையில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டதை
அடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றப்புள்ளி வைக்கும் விதததில், அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் அத்வானிக்கு நாடாளுமன்றத்தின் 4ம் எண் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. திடீரென அவரது அறையின் வாயிலில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் நடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் அறையிலேயே ஒய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது அத்வானி 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அறைக்கு வெளியே மீண்டும் அவரது பெயர்ப்பலகை பொறுத்தப்பட்டுள்ளது.   இதுக்காகவா நான் அயோத்திக்கு கமண்டலம் தூக்கி  வடக்கும் தெற்கும் யாத்திரை யாத்திரையா அலைஞ்சு ... அட நாம தோத்திருந்தா கூட நல்ல இருந்திருக்குமே . இப்ப அழவும் முடியாம சிரிக்கவும் முடியாமா பண்ணி புட்டானே ? எனக்கு வேணும் எனக்கு வேணும் , இப்படி தனியா மண்டபத்தில ஒரு  அறையும் இல்லாம புலம்ப வச்சுட்டானே அந்த ... இப்ப பாரு பேரை ஸொல்ல கூட  முடியல்ல டா சாமி  ?  பெரிசு பேசாம மானாட மயிலாட மாதிரி ஏதாவது பாக்க போயிடலாம்னே! வேறொன்னுமில்ல பெரிசு எல்லாம் நீங்க  செஞ்ச வினைதான் கெடுவான் கேடு நினைப்பான்

கருத்துகள் இல்லை: