வெள்ளி, 13 ஜூன், 2014

கலைஞர் : ராமதாசும், நானும் உண்மையை சொன்னோம

மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என, எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் விடுத்திருக்கின்றனர். எது உண்மை என்பதை மக்களே அறிவர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: