வெள்ளி, 10 ஜனவரி, 2014

தில்லைக் கோயில் தீட்சிதன் சொத்தா? பாப்பாத்தியும் சு சாமியும் தீட்சதனும் கூட்டு சதி


தில்லைக் கோவில் மக்கள் சொத்து திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் 

1. திருச்சி

  • தில்லைக் கோயிலை தீட்சிதனுக்குப் பட்டா போட்டுவிட்டது உச்சுக்குடுமி மன்றம்!
  • தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?
  • மானமுள்ள தமிழ் மக்களே கொதித்தெழுங்கள்!
என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக 09.01.2014 காலை 10மணிக்கு திருச்சி இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச்சொத்தான தில்லை நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் தங்கள் சொத்தாக கொள்ளை இட்டு அனுபவித்து வந்ததை எதிர்த்தும் தமிழில் தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்தும் ஆறுமுகசாமி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் இணைந்து 10 ஆண்டுகளாக போராடி கோயிலை அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். ஆனால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஆதரவாக அரசே துணை நின்று அரசு கட்டுப்பாட்டில் இருந்த கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க காரணமாக இருந்துள்ளது. பாப்பாத்தியும் சு சாமியும் தீட்சதனும் கூட்டு சதி

  • மூத்த வழக்குரைஞர்கள் யாரையும் நியமிக்காமல் அரசு தரப்பை தோற்கடிக்க அரசே துணை போன செயலை கடுமையாக கண்டித்து பேசப்பட்டது.
  • மீண்டும் அக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் தமிழில் தேவாரம் ஒழிக்க ஏதுவாக தமிழக சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றி கோயிலை அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி பேசப்பட்டது.
  • தீண்டாமையை கடைபிடிக்கும் வகையில் நந்தன் நுழைந்த தெற்க்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமை சுவரை அகற்றிட வேண்டும். கோயிலுக்குள் இருந்த தீட்சிதர்கள் அகற்றிய நந்தனார் சிலை நிறுவப் படவேண்டும் என்றும் வலியுறுத்தி பேசப்பட்டது.
  • மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஓயமாட்டோம் என்று எழுச்சிகரமான முழக்கங்களும் போடப்பட்டது.
  • ம.க.இ.க.வின் மையக்கலைகுழுவினரின் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. வினவு.கம 

கருத்துகள் இல்லை: