வியாழன், 3 அக்டோபர், 2013

சீமாந்த்ராவுக்கு விஜயவாடா தலைநகராகிறது ! தெலுங்கானவுக்கு ஹைதராபாத் தலைநகராகிறது ! தற்காலிக பொது நகராக ஐதராபாத்தே நீடிக்கும் !

புதுடெல்லி: தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆந்திராவில் கடும்
எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தெலங்கானாவுக்கு ஐதராபாத்தையும், சீமாந்திராவுக்கு விஜயவாடாவையும் தலைநகராக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு தயாரித்துள்ளது. இந்த குறிப்பு அமைச்சரவை குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் விரைவில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிகின்றன. தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடைமுறைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று கூறப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆந்திராவில் இருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா அமைக்கப்படுகிறது. மேலும்  தெலுங்கானா உருவாக்கும் நடைமுறையை வகுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்ள்ளது. புதிய தெலுங்கானா மற்றும் சீமாந்திராவின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும். பொது தலைநகராக ஐதராபாத் 10 ஆண்டுக்கு இருக்கும் என அமைச்சர் ஷிண்டே தகவல் dinakaran.com

கருத்துகள் இல்லை: