ஞாயிறு, 10 ஜூன், 2012

Police நித்தியானந்தா தப்பி ஓட்டம்! மதுரை ஆதினம் பெங்களூரில் தவிப்பு!

செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் நித்தியானந்தா உள்பட 8 பேர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தாவை தவிர 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக போலீசார் தேடுவதால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா தப்பி ஓடினார். தலைமறைவாகிவிட்ட நித்தியானந்தாவை பிடிக்க பிடதி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். >நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பிடதி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நித்தியானந்தாவுடன் சென்ற மதுரை ஆதினம் அருணகிரிநாதர் பெங்களூரில் தவித்து வருகிறார். நித்தியானந்தா திடீரென தலைமறைவானதும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளார் அருணகிரிநாதர். மேலும் நித்தியானந்தாவுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா, எப்படி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வது என்ற ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: