புதன், 11 மே, 2011

அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளில் குடியேற இலங்கையர்கள் முயற்சி!


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கோகோஸ் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற குடியேற்றவாசிகள் அனைவரும் இலங்கையர்களே என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் திகதி சுமார் எண்பத்தி எட்டுப் பேரைக் கொண்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுவொன்று அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவைச் சென்றடைந்திருந்தது.

மீன்பிடிப்பட கொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்த அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதனை அங்குள்ள இலங்கைத் தூதரகத் திற்கு அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைக்கு அவுஸ்திரேலியாவில் ஆறாயிரத்துக்கும் அதிமான சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்றும் மேலதிகத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது

கருத்துகள் இல்லை: