வெள்ளி, 1 டிசம்பர், 2023

சத்தீஸ்கர் எக்சிட் போல் முடிவுகள் : அடித்து ஆடும் காங்கிரஸ்... ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார்?

tamil.samayam.com- எழிலரசன்.டி ;  ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், சத்தீஸ்கரில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தனைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபற்றி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விவரங்களை அலசுவோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி மற்றும் நவம்பர் 17ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.


மாநிலம் முழுவதும் மொத்தமாக 76.31 சதவிகித வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள தொகுதிகளில் 46 தொகுதிகளை வென்றால் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சத்தீஸ்கரில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்திஸ்கர் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் இன்று மாலை வெளியிட்டன.
மிசோரம் எக்ஸிட் போல் முடிவுகள் 2023: MNF, ZPM, காங்கிரஸ் மும்முனை போட்டி... அடுத்து யாருடைய ஆட்சி தெரியுமா?சிஎன்என் - நியூஸ் 18 வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 48 - 56 இடங்களில் வெற்றிபெறலாம் என்றும், பாஜக 32 - 40 தொகுதிகளை வெல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும் என்று கூறுகிறது. காங்கிரஸ் 40 - 50 இடங்களிலும், பாஜக 36 - 40 இடங்களிலும் மற்ற கட்சிகள் 1 - 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மேலும், காங்கிரஸுக்கு 42 சதவிகிதம் வாக்குவங்கியும், பாஜகவுக்கு 41 சதவிகித வாக்கு வங்கியும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

காங்கிரஸ், திமுக சண்டை போட்டால் பாஜக வெல்லும்?

அதே ஏபிபி செய்தி நிறுவனம் சி - வோட்டர்ஸ் இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸே வெல்ல வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் 41 - 53 இடங்களிலும், பாஜக 36 - 48 இடங்களிலும், இதர கட்சிகள் 0-4 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக அதன் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ரிபப்ளிக் மற்றும் மெட்ரிஸ் இணைந்து எடுத்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 44 முதல் 52 இடங்களிலும், பாஜக 34-42 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கேசிஆருக்கு டஃப் கொடுக்கும் காங்கிரஸ்.. தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றபோவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!
பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் மீண்டும் வரும் என்றே கூறுகின்றன. கருத்துக் கணிப்புகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜகவைச் சேர்ந்த சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங், பாஜக 52-55 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் காங்கிரஸ் மீண்டும் அரியணையில் ஏறும் என முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எழிலரசன்.டி கட்டுரையாளரை பற்றி
டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர்
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்

கருத்துகள் இல்லை: