செவ்வாய், 28 நவம்பர், 2023

புலி சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்தவர் கைது

ilakkiyainfo.com :  புலி சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்தவர் கைது
புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும்  புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.
கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே, செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் திங்கட்கிழமை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.


இதன்போது தடைசெய்யப்பட்ட  புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும்  புலிகள் அமைப்பின் தலைவரின் படம் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரிடம் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை: