புதன், 28 அக்டோபர், 2020

அன்று குஷ்பு கூறிய சொல்லை திரித்து அவர்மீது வீண்பழி .. இன்று அதே பாணியில் குஷ்பு திருமா மீது?

Suguna Diwakar : 'திருமணத்துக்கு முன்பு உறவுகொள்ள நேர்ந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்" என்று குஷ்பு சொன்னது திரிக்கப்பட்டு "தமிழ்ப்பெண்கள் இழிவானவர்கள் என்று குஷ்பு சொன்னார்" என்று அவர்மீது தாக்குதல்களும் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. 

இப்போது மனுஸ்மிருதியில் உள்ள ஆணாதிக்க வக்கிரத்தைத் திருமாவளவன் முன்வைக்கும்போது, "திருமா இந்துப்பெண்களை இழிவுபடுத்திவிட்டார்" என்று இந்துத்துவவாதிகள் திரிக்கிறார்கள். ஒரு சொல் திரிக்கப்பட்டால் அதன் விளைவையும் வலியையும் உணர்ந்த குஷ்பு, இன்று அதே இழிவான ஆயுதத்தை எடுப்பது அறமற்ற செயல்.  

கருத்துகள் இல்லை: