திங்கள், 26 அக்டோபர், 2020

மலையக தோட்டப் போராட்டங்களில் உயிர் நீத்த போராளிகள்.. வரலாற்றை திரைப்படமாக எடுங்கள்

 
Nallaiya Vinothan : · மலையகத்தின் வரலாறு தெரியவேண்டும் என்றால் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுங்கள். நமது மலையக தோட்டத் தொழிலாளர்களின் உயிர் தியாக #போராளிகள் 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த கோவிந்தன்
* 1942இல் புப்பரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த  வேலாயுதம், வீரசாமி
*1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த வைத்திலிங்கம்
*1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த எட்லின்நோனா
*1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த பீ.#வெள்ளையன்
*1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த #காருமலை
*1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த #அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ
*1957 ஜூலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை எனிக் தோட்டத்தில் உயிர் கொடுத்த #பொன்னையன் #கொம்பாடி ஆகியோர்
*1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த நடேசன்
மலையத்தின் உயிர் தியாக #போராளிகள்
தொடர்ச்சி
*1958 மார்ச் 30ஆம் திகதி #பொகவந்தலாவை போரட்டத்தி உயிரி கொடுத்த #நீத்தபிரான்சீஸ் மற்றும் #ஜய்யாவு ஆகியோர்
*எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் #பம்பேசும தோட்டத்தில் உயிர் கொடுத்த #நித்தமாமுண்டு
*1960 இல் மாத்தளை மாதென தோட்டத்தில் உயிர் கொடுத்த #முத்துசாமி
*1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டத்தில் உயிர் கொடுத்து #தங்வேலு
*1960 இல் நிட்டம்புவ  மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த சிதம்பரம்
*1961 நவம்பரில் நாவலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ( லெட்சுமி தோட்டம்)
தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த ஆராயி ,#நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர்
*1964 மே 28 ஆம் திகதி மாத்தளை #கந்துநுவர தோட்ப் போராட்டத்தில் உயிர் கொடுத்த  அழகர், ரெங்கசாமி ஆகியோர்
*1967 நவம்பர் 08 ஆம் திகதி  மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த #சோனை
*1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த  சின்னப்பன், அந்தோனிசாமி
*1970 இல் செப்டெம்பரில் பதுளை சீனாகெல தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த  அழகர்சாமி, ராமையா
*1970 இல் டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை
கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த பார்வதி,கந்தயை,ஆறுமுகம், ராமசாமி ஆகியோர்
*1977 மே 11ஆம் திகதி தலவாக்கலை

டெவன் தோட்டூ் போராட்டத்தில் உயிர் கொடுத்த சிவனு லட்சுமணன்
*கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த பழனுவேல்

கருத்துகள் இல்லை: