புதன், 28 அக்டோபர், 2020

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்! நீட் தேர்வு. ரஃபேல் ஊழல். இந்தி, விலைவாசி உயர்வு. கீழடி முடக்கம்

ஷங்கர் :கடந்த இரண்டு ஆண்டுகளில் .......! வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!     நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!      நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!     சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!   நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!      நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!    நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!       கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?       திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!      எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!  பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!      பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!    அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!         இது போல,கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பா ட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.        இவர்கள் இப்படி திசை திருப்பி வருவதால்     மத்திய  அரசு  மாநில   அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.

நீட் தேர்வு
ரஃபேல் ஊழல்
இந்தி திணிப்பு
விலைவாசி உயர்வு
கீழடி ஆய்வு முடக்கம்
வேலை வாய்ப்பின்மை
காவல் துறை அராஜகம் 
புதிய மீன்பிடி கொள்கை
OBC இட ஒதுக்கீடு பறிப்பு
பணமதிப்பிழப்பு தோல்வி
GST வரி மற்றும் வரிஉயர்வு
தூத்துக்குடி படுகொலைகள்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு
எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்
காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு
2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
தமிழக பணியில் வட இந்தியர் நியமனம் புதிய கல்வி கொள்கை என்று குலக்கல்வி
டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம்
என அனைத்து மக்கள் பிரச்சினைகளையும்
பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.
தமிழக மக்கள் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: