சனி, 29 அக்டோபர், 2016

ஆஸ்திரேலியாவில் பஞ்சாபி ஓட்டுனர் பேருந்தில் எரிந்து கொலை Brisbane bus driver set on fire and killed


சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பஞ்சாபி இனத்தை சேர்ந்த இவர், தனது பணியில் இருந்த போது பயணி ஒருவரால் திடீரென தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் முன்னிலையிலே நடைபெற்றது. பேருந்தில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கு எதுவும் குறிப்பிட்ட பின்னணி உள்ளதாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பேருந்து முழுவதும் எரியவில்லை எனவும் இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது dailythanthi.com

கருத்துகள் இல்லை: