வியாழன், 27 அக்டோபர், 2016

ஜெ.வின் சிகிச்சையில் இருந்து விடைபெறுகிறார் ரிச்சர்ட் பேல்!

உடல்நலக் குரைறவு காரணமாக செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை வந்தார். லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு, அடுத்து எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போதுவரை அவர் லண்டனில் இருந்து சென்னைக்கு அவ்வப்போது வந்து ஜெ.வுக்கு சிகிக்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட அப்பாயிண்மென்ட்டுகளை தவிர்க்க முடியாது என்பதால், வருகிற 7ஆம் தேதி ஜெ.வின் சிகிச்சையில் இருந்து விடைபெறுகிறார் என அப்பல்லோ மருத்துவ வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன. தாமோதரன் பிரகாஷ்<  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: