வெள்ளி, 16 அக்டோபர், 2015

லாலு பிரசாத் மீது விழுந்த மின்விசிறி! பிரச்சார கூட்டத்தின் போது அதிர்ச்சி !


ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று பீகாரில் ஒரு தேர்தல் அணிவகுப்பில் உரையாற்றினார் அப்போது மின்விசிறி ஒன்று அவர்மேல் விழுந்தது. இதில் லாலு பிரசாத் யாதவ் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பினார். பீகார் மாநிலம் மோத்திகாரி மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்ட மேடையில் உட்கார்ந்திருந்த போது இந்த சம்பவம் நடந்தது. வீடியோவில் நாம் தெளிவாக காணலாம், நிலையற்று இருந்த மின்விசிறியை பற்றி லாலு தன் உதவியாளரிடம் கூறுகிறார். அவர் கூறிய சில விநாடிகளிலே மின்விசிறி கீழே அமர்ந்திருந்த லாலு மீது விழுந்தது. எனினும் மின்விசிறி தாக்கிய சம்பவத்தில் லாலு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பினார். உடனடியாக மேடையில் இருந்து மின்விசிறி அகற்றப்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. nakkheeran.in

கருத்துகள் இல்லை: