செவ்வாய், 13 அக்டோபர், 2015

நடிகர் கார்த்திக்கின் துப்பாக்கி....விமான நிலையத்தில் சகோதரர் கைது....

 பிரபல நடிகர் கார்த்திக்கின் சகோதரரும், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனுமான கணேஷ் என்பவர், விமான நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்தததால், அவரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் இருந்து நேற்று முன்தினம் மதுரை வந்த கணேஷ் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மேல் விசாரணைக்காக கணேசை பெருங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கணேஷ், ‘‘இது என்னுடைய கைப்பை அல்ல. நடிகர் கார்த்திக்கு சொந்ததுப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகமானது. அவர் கடந்த முறை கொடைக்கானல் வந்தபோது ஓட்டலில் இதனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார்.
அதன்பின் என்னிடம் இதனை தெரிவித்த கார்த்திக், சென்னை வரும் போது பையை கொண்டு வருமாறு கூறினார். நானும், அதனை எடுத்து வந்தேன். அதில் இருப்பது தோட்டாக்கள் என தெரியாது’’ என்றார். போலீசார், நடிகர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில் அது அவரது கைப்பை தான் என்பதும், துப்பாக்கி வைத்து இருக்க லைசென்சு வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கி தோட்டாக்களை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததாக வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் கணேஷ் விடுதலை செய்யப்பட்டார் //tamil.chennaionline.com/n

கருத்துகள் இல்லை: