திங்கள், 20 அக்டோபர், 2014

நடிகர் சந்திரசேகர் திமுகவை விட்டு அதிமுகவுக்கு போகமாட்டாராம் !

வாகை சந்திரசேகர் தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். 1999 பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வாகை சந்திரசேகர் தற்போது கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து வாகை சந்திரசேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:–
நான் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. தி.மு.க.வை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். நான் தி.மு.க.வில் ஒரு அங்கம். தமிழன் என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேனோ அதே பெருமை தி.மு.க.காரன் என்பதிலும் எனக்கு கிடைக்கிறது.
தி.மு.க.தான் எனக்கு அடையாளம். எனவே நான் இந்த கட்சியில் இருந்து விலகப் போகிறேன் என்ற செய்தியை யாரும் நம்ப மாட்டார்கள்.
என் மீது வழக்கு போடப்பட்டபோது தலைவர் கலைஞர் விசாரித்தார். தளபதி ஸ்டாலின் வக்கீல் ஏற்பாடு செய்து கொடுத்தார். இருந்தாலும் சும்மா சும்மா புகை வருமா ? சூட்கேஸ் பவரும் பெருசுதாய்ன் ! சுப்பிரீமும் இப்படிதாய்ன் உதார் விட்டாஹ அப்புறம் இருவது சீக்களுக்கு போனாங்க !

நான் கட்சிகாரன் என்பதையும் தாண்டி கலைஞரின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறேன். தி.மு.க.வுக்கு என்னால் சிறிய இழுக்கு ஏற்படுவதை கூட தாங்கிக் கொள்ள மாட்டேன்.
நடிகர் சங்கத்தில் அரசியல் இல்லை. தலைவராக இருக்கும் சரத்குமார் ஒரு கட்சியில் இருக்கிறார். பொதுச்செயலாளராக இருக்கும் ராதாரவியும், நானும் வேறு வேறு கட்சியில் இருக்கிறோம். கட்சிக்கு எந்த இழுக்கும் ஏற்படாத வண்ணம்தான் நடிகர் சங்க பணியை செய்து கொண்டு இருக்கிறோம்.
தி.மு.க. என்பது தலைவர் கலைஞர்தான். தளபதி ஸ்டாலின் சகோதரராக இருக்கிறார். என் முகவரி இவர்கள் இருவரும்தான்.
இவ்வாறு வாகை சந்திரசேகர் கூறினார்.

கருத்துகள் இல்லை: