வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கட்டை பஞ்சாயத்துக்கு பணிந்த விஜய் முருகதாஸ் கூட்டணி ! லைக்காவின் அடுத்த படம் சீமான் இயக்குகிறார் !

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை.  கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான்,  இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார். இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறாராம். இது ஏற்கெனவே விஜய், ஜெயம் ரவி போன்றவர்கள் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. லைகாவுக்காக படம் இயக்கும் வாய்ப்பை சீமானுக்குப் பெற்றுத் தந்தவர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது கூடுதல் தகவல்! இப்ப புரியறதா ஏன் சீமான் கட்சி ஆரம்பிச்சார்னு ? அது ஒரு கட்சியே இல்லீங்க அது ஒரு கட்டை பஞ்சாத்து !எல்லாம் வசூலுக்கு தாய்ங்க !
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: