புதன், 6 ஆகஸ்ட், 2014

சவூதி அரேபியா ஆண்கள் பாகிஸ்தான் வங்கதேச பெண்களை திருமணம் செய்ய தடை !

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஆண்கள், பாகிஸ்தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்த கொள்ளவதற்கு தடை விதித்து அந்நாட்டில் இருந்து உத்தரவு வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பெண்கள் வசித்து வருகிறார்கள்
இந்தத் தடை குறித்து மெக்கா காவல்துறை உயர் அதிகாரி அஸ்ஸாப் அல் குரேஷி கூறுகையில், வெளிநாட்டு பெண்களை மணப்பது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள்  வரப்பட்டுள்ளன.  திருமணத்திற்கு முன்பு தாங்கள் மணக்கப் போகும் பெண்கள் குறித்த விவரத்தை சமர்ப்பிப்பதோடு, ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும் .

மனுதாரருக்கு வயது 25க்கு மேல் இருக்க வேண்டும். உள்ளூர் மேயரிடம் தங்களது அடையாளச் சான்றிதழ்களை ஒப்பம் பெற்று வர வேண்டும். குடும்ப அட்டையும் இணைக்கப்பட வேண்டும். ஏற்கனவே திருமணமானவராக இருந்தால் அவரது மனைவி உடல் ஊனமுற்றவரா அல்லது நோயாளியா என்பது குறித்து மருத்துவச் சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளர்.
இந்நிலையில் சவுதி அரேபிய அரசு இது தொடர்பாக தடை விதித்தாகாக எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
உலகில் அதிக அளவு கச்சா எண்ணைய் உற்பத்தி செய்து வரும் முக்கியமான நாடுகளில் சவுதி அரேவியாவும் ஒன்று. இங்கு சுமார் 9 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் ஆகும். dinamani.com

கருத்துகள் இல்லை: