திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சீனாவில் இன்று 6.5 ரிக்டர் நிலநடுக்கம் ! சுமார் 400 பேர் பலி ?

சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளிவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது. ; இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 400 இருக்கலாம் என அஞ்சப்படுகிறது . 2,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப்பணைகளை ராணுவத்தினர்  மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின், இந்திய மற்றும் நேபாள எல்லையையொட்டிய அருணாசல பிரதேச மாநிலம் அருகே உள்ள, ஷிகேட்ஸ் பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. dinamani.com

கருத்துகள் இல்லை: