திங்கள், 31 மார்ச், 2014

ஆரியத்திற்கு முன் தமிழன் தெலுங்கன் மலையாளி மராட்டியன் இந்திக்க்காரன் கிடையாது

ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் யுத்தமே தவிர ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்பது கண்கட்டி வித்தை.//
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதற்கு எதிராகா மாறிவிடுகிறார்கள். ‘பிராமணர் சங்கத்தோடு இணைந்து அதிமுக வை ஆதரிப்போம்’ (கண்கட்டாத வித்தை)
இதை பச்சை சந்தர்ப்பவாதம் என்றால்.. நீங்கள் தமிழன துரோகி. ‘இதுதான் பச்சைத் தமிழனின் கொள்கை’ அப்போ நீங்களும் அதேதான். அதாங்க.. பச்சை. ஆரியத்திற்கு முன் தமிழன் தெலுங்கன் மலையாளி மராட்டியன் இந்திக்க்காரன்என்ற வேறுபாடுகள் கிடையாது… எல்லோரும் அவர்களுக்கு சூத்திரன், பஞ்சமர்கள்தான்.
ஒவ்வொரு தமிழன் தெலுங்கன் மலையாளி இவர்கள் உள்ளும் இருப்பது இதுவே. அதையே ஆரியர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆரியர்கள் தனக்கு எதிராக நினைப்பது திராவிடத்தைதான். திராவிடம் என்கிற வாரத்தை சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் அதை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை. விரும்புவதுமில்லை. சூத்திரனா, பஞ்சமனா இருக்க வேண்டுமானால் பெரியாரை எதிர்க்கிற தமிழனா இரு.
சுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு. mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: