வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பதறிக்கொண்டு மதுரை வந்து இறங்கினார் மு.க.அழகிரி!

Viruvirup
மத்த கட்சிக்காரங்க நம்மாள தொட மாட்டாங்களே...
மத்த கட்சிக்காரங்க நம்மாள தொட மாட்டாங்களே…
பொட்டு சுரேஷ் நேற்று மதுரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து, மதுரை வந்து இறங்கியுள்ள மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, “பொட்டு சுரேஷ் எனது நண்பன், உண்மையான விசுவாசி” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரின் நண்பர் பொட்டு சுரேஷ் மீது கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
படுகொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முன் பகை, உட்கட்சி பூசல் அல்லது தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்த மு.க. அழகிரி இன்று பகல் மதுரை வந்து சேர்ந்தார். பொட்டு சுரேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய நண்பனாக, உண்மையாக விசுவாசியாக இருந்தவர் பொட்டு சுரேஷ். பொட்டு சுரேஷை படுகொலை செய்த யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை: