வியாழன், 31 ஜனவரி, 2013

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?

தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி
 தந்தை பெரியார் நெஞ்சிலிருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.க. அரசில் நிறைவேற்றப் பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை குறித்த முடிவு குறித்து, தற்போதைய அ.தி.மு.க. அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எத்தகைய நட  வடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்று தி.மு.க. தலைவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து இன்றைய முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
கேள்வி: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கழக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அர்ச்சகர்  களுடைய தற்போதைய நிலை என்ன?
கலைஞர்: தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதி யும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறு  பாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது.
அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்;
சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்  பட்டன.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு  உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ் வொருவருக்கும் பிரதி மாதம் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும்  பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த  42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச் சினை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப் பட்டது.
அதன் காரணமாக அவர்களுக்கு உடனடி யாக திருக் கோவில் களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று. அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், உச்சநீதிமன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தா  லோசனையையும் நடத்தவில்லை.
எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தே கிக்கிறோம். 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அர சாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.கழக அரசு மேற்கொண்ட நடவடிக்  கையை அ.தி.மு.க. அரசு எப்படி தொடர்ந்து நிறைவேற்றப் போகிறது என்பதை வரவிருக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது இந்த அரசினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்!

கருத்துகள் இல்லை: