செவ்வாய், 29 ஜனவரி, 2013

கமல் தமிழக அரசுடன் போசாமல் ஒதுங்கிய காரணம்.. பிளஸ் பாயின்ட்!

விஸ்வரூபம் படம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றபோது, நாளை (இன்று) விசாரணைக்கு முன், அரசு அதிகாரிகளுடன் கமல் பேசி சுமுகமான முடிவுக்கு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறிவிட்டே, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தது.
அதையடுத்து, கமல் தலைமைச் செயலகத்துக்கு வருவார் என அங்கு செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
ஆனால், கமல் வரவில்லை.
இந்த படத்துக்கு தடை விதித்ததில் தமிழக அரசுக்குதான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கமலுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாக தகவல். டில்லியில் இருந்தும் இந்த விஷயத்தில் கமலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
தமிழக அரசு சட்டரீதியான தகுந்த காரணங்கள் இல்லாமல் செய்த தடை என்பதில் கமல் தரப்புக்கு ஒரு பிளஸ் உள்ளது. எனவே இன்றைய விசாரணைக்கு முன், தேவையில்லாமல் தமிழக அரசிடம் போய் எதற்காக உங்களுக்கு உள்ள பிளஸ் பாயின்டை இழக்க வேண்டும் என அட்வைஸ் கொடுக்கப்பட்டதாம்.
தமிழக அரசை சந்திப்பது என்றால், இன்றைய விசாரணையின் போக்கை பார்த்துவிட்டு முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டதாம்.
அத்துடன், இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி, சுப்ரீம் கோர்ட்வரை கமல் செல்ல முடியும் என்கிறார்கள்.viruvirupu.com/2013/01/29/45709/

கருத்துகள் இல்லை: