வியாழன், 6 டிசம்பர், 2012

Priyamani:அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன்

அமீர் இருக்கும் மேடைக்கு நான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாராம் பிரியாமணி.
ப்ரியாமணியின் நடிப்பு வாழ்க்கையில் பெரிய திருப்பம் தந்த படம் பருத்தி வீரன். இந்தப் படம் மூலம் தேசிய விருது பெற்று நாடறிந்த நடிகையானார்.
ஆனால் பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு,. அமீர் இருக்கும் திக்கைக் கூட திரும்பிப் பார்க்க மறுக்கிறாராம் அம்மணி.  விசுவாசத்திற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா ? டைரக்டர் அமீர்  சற்று மனிதாபிமானம் குறைந்தவர் என்று ஒரு வதந்தி உண்டு உண்மையா?!

சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ப்ரியாமணியை அழைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் வர ஒப்புக் கொண்டுள்ளார் இந்த முத்தழகி. பின்னர்தான் நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் வருவார்கள் என்று விசாரித்துள்ளார்.
இயக்குநர் அமீர்தான் சீப் கெஸ்ட் என்று சொன்னார்களாம். அவ்வளவுதான். படக்கென்று எழுந்தவர், அவர் பேச்சை எடுக்காதீர்கள். அவர் இருக்கும் மேடைக்கு நான் வரவே மாட்டேன். இந்தாங்க உங்க இன்விடேஷன் என்று கோபமாகக் கூறி அனுப்பிவிட்டாராம்.

கருத்துகள் இல்லை: