சனி, 8 டிசம்பர், 2012

நான் நேர்மையானவன்; பதவி விலக மாட்டேன்!' நிதின் கட்காரி

""நான் ஒரு நேர்மையான மனிதன்; அதனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார்.டில்லியில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, கட்காரி கூறியதாவது: நான் வர்த்தகர் அல்ல; சமூக நல விரும்பி. எனக்கு எதிரான கூறப்பட்ட, குற்றச்சாட்டுக்கள் எல்லாம் நிரூபிக்கப்படவில்லை.
யாரைக் கண்டும் நான் பயப்படவில்லை. ஊடகங்கள் எனக்கு எதிராக, எந்த முடிவுக்கும் வர முடியாது. எனக்கு எதிராக, ஒரு வழக்கு கூட, இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மகாராஷ்டிராவில், நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், எந்த ஒரு நிறுவனத்திற்கும் சாதகமாக செயல்பட்டதில்லை.அடுத்த லோக்சபா தேர்தலுக்குப் பின், மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலில், பா.ஜ., 175 இடங்களுக்கு மேல் பிடித்து விட்டால், பல கட்சிகள் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது நிச்சயம். பா.ஜ., கட்சியில், பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.நான் நேர்மையானவன்; பதவி விலக மாட்டேன்!' நிதின் கட்காரி  ...கத்காரி உங்க புத்தி ரேகை ரொம்ப ஷோர்டாக இருக்குதே போதாக்குறைக்கு இருதய ரேகைவேற கீழ் நோக்கி ஒரு கிளை பாயுதே நல்லதுக்கு இல்லையே 

K.Sugavanam
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
அப்புடீன்னு நீங்க மட்டும் தானே பொலம்புரீங்க.ஒங்க கட்சி காரனே ஒங்க கால வார்ரானே.பாவம் ஒங்க நெலமைய பாத்தா நண்டு கதைதாங்க ஞாபகம் வருது... ha
http://www.dinamalar.com/

பிரதமர் பதவி வேட்பாளர் யார் என்பதை, சரியான நேரத்தில் கட்சி அறிவிக்கும். பா.ஜ., ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சி; முடிவுகள் எல்லாம் கூட்டாகவே எடுக்கப்படும். பா.ஜ., சார்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முடிவுகள் எடுக்கிறது என்று கூறுவதெல்லாம் தவறானது.இவ்வாறு கட்காரி கூறினார்.பா.ஜ., தலைவராக நிதின் கட்காரி, 2009ல் பதவியேற்றார். இந்த மாதத்துடன், அவரது பதவிக்காலம் முடிகிறது.
இரண்டாவது முறையாக, அவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் வகையில், சமீபத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.ஆனாலும், கட்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில், போலி பெயரில் பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக, ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால், தலைவர் பதவியிலிருந்து அவர், விலக வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவர்களான, ராம் ஜெத்மலானி மற்றும் யஷ்வந்த் சின்கா உட்பட, பலர் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை, தற்போது, கட்காரி நிராகரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: