ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர்., உறுதிபூண்டார்

tamil Selvan - chennai,இந்தியா
 கோமளவல்லி ஆட்சியில் இதை தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?வேண்டும்?
சென்னை:“”சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர்., உறுதிபூண்டார்,’’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:சேது கால்வாய் திட்டத்தை ஆராய, எச்.ஆர்.லட்சுமி நாராயணன் தலைமையிலான குழு 1981ம் ஆண்டு, தமிழகம் வந்தது. சேது கால்வாய் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அக்குழுவிடம் விரிவாகத் தெரிவித்தார். மேலும், 1985-90ம் ஆண்டில் ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தை சமர்பத்தபோது, சேது கால்வாய் திட்டத்தை நிøவேற்றியே தீர வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர்., வலியுறுத்தினார்.
இப்போதுள்ள தமிழகத்தின் முதலமைச்சரோ, சேது கால்வாய் திட்டம் தேவையில்லை. ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தியுள்ளார். பல பயணங்களை கடந்து, சேது கால்வாய் திட்டம் துவங்கப்பட்டு 75 சதவீத பணிகள் முடிந்த நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. சேது கால்வாய் அமைக்கப்பட்டால், தமிழகத்துக்கு கிடைக்கும் பயன்களை கருத்தில் கொண்டு, கட்சி வேறுபாடின்றி அனைவரும் இணைந்து, திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: