ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஓ.பன்னீர்செல்வம்: மின்வெட்டு ஒரு சிறிய பிரச்சினை!

முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப்போதுதான் காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக முடியும்.
எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க.வினர் உழைக்க வேண்டும்.
ஒரு சிறிய பிரச்சினை உள்ளது. மின்வெட்டுபிரச்சினை. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தோம். அதன்பிறகு வந்த தி.மு.க. அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை. அப்படிங்களா உங்களை விட மக்களுக்கு ஞாபக சக்தி அதிகம் பன்னீரு .
தற்போது கூடுதலான மின் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: