புதன், 1 ஆகஸ்ட், 2012

Anna Hazare பின்னணியில் அரசியல் சதி உள்ளது மத்திய அமைச்சர் தகவல்

அன்னா ஹசாரே போராட்ட பின்னணியில் அரசியல் சதி உள்ளது மத்திய அமைச்சர் தகவல்

அன்னா ஹசாரே குழு வினரின் போராட்ட பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக நாரா யணசாமி தெரிவித்துள் ளார். மத்திய இணைய மைச்சர் நாராயணசாமி நேற்று காலை சென் னையில் இருந்து விமா னம் மூலம் டில்லி புறப் பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோ தாவை நிறைவேற்ற பிரதமர் மன்மோகன் சிங் அதிக ஆர்வத் துடன் செயல்படுகிறார். ஆனால் எதிர்க்கட்சி கள் அந்த மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளதால் அந்த திருத்தங்கள் சம் பந்தமாக எதிர்கட்சி யினருடன் பிரதமர் பேச்சு நடத்துகிறார்.
இந்நிலையில் அன்னாஹசாரே குழுவினர். மத்திய அரசு, லோக்பால் மசோதாவை கொண்டுவராமல் இருப்பதைப்போல் ஒரு பொய்யான தோற் றத்தை உருவாக்கி போராட்டம் நடத்து கின்றனர். அவர்க ளது போராட்டம் இப் போது வன்முறையாக மாறிவிட்டது.

அன்னா ஹசாரே குழுவினரின் போராட்ட பின்னணி யில் அரசியல் சதி உள் ளது. ஒரு சில எதிர்கட் சிகள் தூண்டிவிட்டுத் தான் இந்த போராட் டம் நடக்கிறது. சென் னையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன்பு அக் குழுவினர் வன்முறை யில் ஈடுபட்டது கண் டிக்கத்தக்கது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலையில் உள்ளன. அணு உலை களின்பாதுகாப்பு குறித்து அணு சக்தி பாது காப்பு கமிட்டி நடத்தும் ஆய்வு முடிவடைந்துள் ளது.
இதன் அறிக்கை மத்திய அணு சக்தி பாது காப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் அவர் கள் அனுமதி வழங்கிய பிறகு அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் கூடங்குளம் அணு உலையில் இருந்து மின் உற்பத்தி தொடங் கும்.

கருத்துகள் இல்லை: