செவ்வாய், 5 ஜூன், 2012

வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் வழக்கு

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக போலீசார் கடந்த 2001-ம் ஆண்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிலும், அபிராமபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ஹெராயின் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டினர். இந்த வழக்குகள் சென்னை போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. 
ஜெயலலிதா நம்பிக்கை அடிப்படையில் கொடுத்து வைத்திருந்த பெருமளவு கருப்பு பணத்தை சுதாகரன் ஏப்பம் விட்டதாக ஒரு தியரி உண்டு.

இந்த இரு வழக்குகளையும் இணைத்து விசாரிக்க அனுமதி தருமாறு போலீசார், நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.இதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒப்புதல் வழங்கினார். மேலும், இந்த வழக்கை வரும் 11-ம் தேதி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து,இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் இன்று சமர்ப் பித்தனர்.

கருத்துகள் இல்லை: