
Damodaran : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு -- ஒரு அநீதி அக்கிரமம். தமிழ் நாட்டில் பாதி பேருக்கு மேல் வேலை இன்றி திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கும் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் வாடுகிறார்கள்
விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நெசவாளர்கள் நாளும் அரைப்பட்டினி , ஏழை நடுத்தர குடும்பங்கள் பற்றாக்குறையால் நரகவேதனை அனுபவிக்கும் இந்த காலகட்டத்தில் .... எம்.எல்.ஏ./எம்.பி.க்களுக்கு மந்திரிகளுக்கு ஊழலுக்கு உதவி செய்யும் அரசு உயர் அதிகாரிகளுக்கு
மாதம் ஒன்றுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் .....
இது ஒரு பெரிய பகல் கொள்ளை அல்லவா ?
ஆசிரியர் அரசு ஊழிழர்களுக்கு
அளவுக்கு அதிகமான சம்பளம் படிகள் வழங்குவது
அநீதி, மனிதாபிமானமற்ற ,இரக்கமற்ற செயல்.
இதுவும் போதாது இன்னமும் பல மடங்கு ஊதியம் கேட்டு நடத்தும் போராட்டங்கள் நியாயமா ?
இவர்களின் சம்பளத்துக்கு ஒரு உச்ச வரம்பே இல்லையா ?


































